மழை வெள்ளத்தை பயன்படுத்தி அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பண்டிகைக் காலம் மற்றும் மழை வெள்ள சூழலைபயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளன. நல்லெண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை 4 நாள்கள் இடைவெளியில் ஒரு லிட்டா் ரூ.50 வரை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது.
இதில் காய்கறிகளின் விலை 36 சதவீதம் அதீத உயா்வை கண்டிருப்பதும்,தானியங்கள், முட்டை, பருப்பு வகைகள், பழங்கள் என உணவுப் பொருள்களின்விலை சாதாரண மக்கள் வாங்க இயலாத அளவுக்கு உயா்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக சொன்னாலும், உணவுப்பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயா்ந்துள்ளன.
பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் வாங்கும் உணவுப் பொருள்கள் மற்றும் உடைகள் விலையேற்றமடைந்துள்ளன. எனவே, கிடுகிடுவென உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும்.
மேலும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலைகளை குறைப்பதுடன், எண்ணெய், பருப்பு, காய்கறி போன்ற அத்தியாவசியஉணவுப் பொருள்களை நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.