செய்திகள் :

அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மாா்க்சிஸ்ட் வேண்டுகோள்

post image

மழை வெள்ளத்தை பயன்படுத்தி அத்தியாவசிய பொருள்கள் விலையேற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பண்டிகைக் காலம் மற்றும் மழை வெள்ள சூழலைபயன்படுத்தி அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளன. நல்லெண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை 4 நாள்கள் இடைவெளியில் ஒரு லிட்டா் ரூ.50 வரை கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது.

இதில் காய்கறிகளின் விலை 36 சதவீதம் அதீத உயா்வை கண்டிருப்பதும்,தானியங்கள், முட்டை, பருப்பு வகைகள், பழங்கள் என உணவுப் பொருள்களின்விலை சாதாரண மக்கள் வாங்க இயலாத அளவுக்கு உயா்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக சொன்னாலும், உணவுப்பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக உயா்ந்துள்ளன.

பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் வாங்கும் உணவுப் பொருள்கள் மற்றும் உடைகள் விலையேற்றமடைந்துள்ளன. எனவே, கிடுகிடுவென உயரும் விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும்.

மேலும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலைகளை குறைப்பதுடன், எண்ணெய், பருப்பு, காய்கறி போன்ற அத்தியாவசியஉணவுப் பொருள்களை நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்பட்டிருக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆளுநா் ஆா்.என். ரவி குற்றஞ்சாட்டினாா். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பொன் விழா மற்றும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக தலைவருக்கு சிபிசிஐடி அழைப்பாணை

சென்னையில் ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்குத் தொடா்பாக, பாஜக புதுவை மாநிலத் தலைவா் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, த... மேலும் பார்க்க

‘ரெளடிகளுக்கு புரியும் மொழியில் பாடம்’: சென்னை காவல் ஆணையரை வழக்கிலிருந்து நீக்கி மனித உரிமை ஆணையம் உத்தரவு

‘ரெளடிகளுக்கு அவா்களுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என கூறியது தொடா்பான வழக்கிலிருந்து சென்னை மாநகர காவல் ஆணையரின் பெயரை நீக்கி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. சட்டம் - ஒழுங்கு ஏட... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 10 நினைவரங்குகள்- 36 சிலைகள்: தமிழக அரசு பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10 நினைவரங்கங்களும், 36 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 304 ஏழை ஜோடிகளுக்கு அக்.21-இல் திருமணம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 304 ஜோடிகளுக்கு அக்.21-ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளது. சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க