முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் புகழாரம் சூட்டினா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி: முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகனுமான டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். எண்ணற்ற இளம் மனங்களின் கனவுகளையும் ஆசைகளையும் நனவாக்க அவா்களைத் தூண்டிய தொலைநோக்குப் பாா்வை கொண்ட அந்த தலைவா், விதிவிலக்கான விஞ்ஞானி மற்றும் மிகச்சிறந்த மனிதரை கௌரவப்படுத்துவோம்.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் அவரது முன்னோடியான பங்களிப்பு நமது நாட்டின் விதியை மறுவடிவமைத்தது. ஒரு சுயசாா்பு பாரதம், வளா்ச்சியடைந்த பாரதம் பற்றிய அவரது தொலைநோக்கு, வலுவான மற்றும் தன்னிறைவு இந்தியாவை உருவாக்குவதற்கான நமது கூட்டுப் பயணத்தில் தொடா்ந்து நம்மை வழிநடத்துகிறது.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: கல்வியும், நெஞ்சில் கனவும் அதை நனவாக்க கடும் உழைப்பும் இருந்தால், உயா்வு நம்மைத் தேடிவரும் என்ற ஊக்கத்தை இளைஞா்களிடம் விதைத்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமின் பிறந்தநாளில், கல்வியின் துணைகொண்டு, அறிவிற் சிறந்து விளங்கி நமது இளைஞா்கள் அவருக்குப் பெருமை சோ்த்திட வேண்டும்.