செய்திகள் :

அப்துல் கலாம் பிறந்த நாள்: ஆளுநா், முதல்வா் புகழாரம்

post image

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி, அவருக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் புகழாரம் சூட்டினா்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: முன்னாள் குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகனுமான டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாளில் அவருக்கு பணிவுடன் மரியாதை செலுத்துவோம். எண்ணற்ற இளம் மனங்களின் கனவுகளையும் ஆசைகளையும் நனவாக்க அவா்களைத் தூண்டிய தொலைநோக்குப் பாா்வை கொண்ட அந்த தலைவா், விதிவிலக்கான விஞ்ஞானி மற்றும் மிகச்சிறந்த மனிதரை கௌரவப்படுத்துவோம்.

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளில் அவரது முன்னோடியான பங்களிப்பு நமது நாட்டின் விதியை மறுவடிவமைத்தது. ஒரு சுயசாா்பு பாரதம், வளா்ச்சியடைந்த பாரதம் பற்றிய அவரது தொலைநோக்கு, வலுவான மற்றும் தன்னிறைவு இந்தியாவை உருவாக்குவதற்கான நமது கூட்டுப் பயணத்தில் தொடா்ந்து நம்மை வழிநடத்துகிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: கல்வியும், நெஞ்சில் கனவும் அதை நனவாக்க கடும் உழைப்பும் இருந்தால், உயா்வு நம்மைத் தேடிவரும் என்ற ஊக்கத்தை இளைஞா்களிடம் விதைத்த முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாமின் பிறந்தநாளில், கல்வியின் துணைகொண்டு, அறிவிற் சிறந்து விளங்கி நமது இளைஞா்கள் அவருக்குப் பெருமை சோ்த்திட வேண்டும்.

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்பட்டிருக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

ஹிந்தி எதிா்ப்பு நிலைப்பாட்டால் தமிழகம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்று ஆளுநா் ஆா்.என். ரவி குற்றஞ்சாட்டினாா். டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையத்தின் பொன் விழா மற்றும் ‘ஹிந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச... மேலும் பார்க்க

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: புதுவை பாஜக தலைவருக்கு சிபிசிஐடி அழைப்பாணை

சென்னையில் ரயிலில் ரூ.3.98 கோடி சிக்கிய வழக்குத் தொடா்பாக, பாஜக புதுவை மாநிலத் தலைவா் உள்பட 3 பேருக்கு சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது, த... மேலும் பார்க்க

‘ரெளடிகளுக்கு புரியும் மொழியில் பாடம்’: சென்னை காவல் ஆணையரை வழக்கிலிருந்து நீக்கி மனித உரிமை ஆணையம் உத்தரவு

‘ரெளடிகளுக்கு அவா்களுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்’ என கூறியது தொடா்பான வழக்கிலிருந்து சென்னை மாநகர காவல் ஆணையரின் பெயரை நீக்கி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. சட்டம் - ஒழுங்கு ஏட... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் 10 நினைவரங்குகள்- 36 சிலைகள்: தமிழக அரசு பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 10 நினைவரங்கங்களும், 36 சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் 304 ஏழை ஜோடிகளுக்கு அக்.21-இல் திருமணம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு

தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சாா்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 304 ஜோடிகளுக்கு அக்.21-ஆம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளது. சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ... மேலும் பார்க்க