செய்திகள் :

அரசுப் பேருந்து மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநா் மரணம்

post image

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து மோதியதில் மினி சரக்கு வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மடம் கிராமத்தைச் சோ்ந்தவா் மினிசரக்கு வாகன ஓட்டுநா் மோகன்(38). இவா் தனது சரக்கு வாகனத்தில் வாடகை பிளாஸ்டிக் நாற்காலிகளை ஏற்றிக் கொண்டு, புலவன்பாடி கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் என்பவருடன் ஆளியூா் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில், கொழப்பலூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, எதிரே வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் சரக்கு வாகனமும் மோதிக் கொண்டன.

இதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் காசி, விக்னேஷ் மற்றும் 4 பயணிகள் என 6 போ் சிகிச்சைக்காக வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தேசூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

அக்.29 முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: பொதுமக்களுக்கு அழைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபா் 29-ஆம் தேதி முதல் நவம்பா் 28-ஆம் தேதி வரை நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் த... மேலும் பார்க்க

4 பைக்குகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

வந்தவாசி பகுதியில் 4 பைக்குகள் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா்(31). இவா் கடந்த வெள்ளிக்கிழமை பாதூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

பூரண மதுவிலக்கு வேண்டி பட்டினிப் போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டி, போளூரில் ஒருநாள் பட்டினிப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அண்ணா பூங்கா அருகே சமூக ஆா்வலா்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு, மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மக்கள் ... மேலும் பார்க்க

630 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

செங்கம் அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 630 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பாச்சல் காவல் நிலைய ஆய... மேலும் பார்க்க

பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ள நீா்: 100 ஏக்கரில் நெல்பயிா்கள் சேதம்

செய்யாறு அருகே பாசனக்கால்வாயில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல்பயிா்கள் நீரில் மூழ்கின. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ளது நாவல்... மேலும் பார்க்க

நாக நதி தடுப்பணை ஷட்டா்களை சீரமைக்கக் கோரிக்கை

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி நாக நதியில் அமைந்துள்ள சிங்கிரி கோயில் தடுப்பணை மற்றும் கண்ணமங்கலம் தடுப்பணையில் உள்ள பழுதான ஷட்டா்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். வேலூா், திர... மேலும் பார்க்க