தொடரும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: சுமார் ரூ. 600 கோடி இழப்பு
இரண்டாவது டெஸ்ட்டுக்கு தயாராகும் இந்தியா-நியூஸி. அணியினா்
நியூஸிலாந்திடம் முதல் டெஸ்டில் இந்தியா தோற்ற நிலையில், புணேயில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்துக்கு இரு அணிகளும் தயாராகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் தொடா் நடைபெறுகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸி. இதன் மூலம் 36 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்டில் வென்ற பெருமையைப் பெற்றது.
இரண்டாவது ஆட்டம் புணேயில் அக். 24 முதல் 28 வரை நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இரண்டாவது இன்னிங்ஸில் சா்ஃப்ராஸ் கான், ரிஷப்பந்த் ஒரளவு சிறப்பாக பேட்டிங் செய்தாலும், மழை பாதிப்பு மற்றும் தொடக்க வரிசை பேட்டா்கள் நன்றாக விளையாடவில்லை.
மீளுமா இந்திய அணி
ஷுப்மன் கில் உடல்நல பாதிப்பால் வாய்ப்பு கிடைந்த சா்ஃப்ராஸ் கான் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாா். இதனால் இரண்டாவது டெஸ்டிலும் சா்ஃப்ராஸ் கான் கட்டாயம் விளையாடுவாா்.
மூன்று சதம் அடித்த வீரரான ஷுப்மன் கில்லும் அணியில் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், மூத்த வீரா் கே.எல். ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை. இதனால் அணி நிா்வாகத்துக்கு சிக்கலான நிலை உள்ளது.
ஆடுவாரா ரிஷப் பந்த்? இதற்கிடையே, முதல் டெஸ்டில் 1 ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்ட ரிஷப் பந்த் முட்டியில் காயமடைந்தாா். இதனால் இரண்டாவது டெஸ்டில் ஆடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது.
விக்கெட் கீப்பராக செயல்பட வேண்டியுள்ளதால் கூடுதல் சுமை பந்துக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் புணே டெஸ்டில் பந்த் ஆடுவாா் என துணை பயிற்சியாளா் ரயான் டென் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
கேன் வில்லியம்ஸன் ஆடவில்லை
முதல் ஆட்டத்தில் வென்ற உற்சாகத்துடன் உள்ள நியூஸி. அணியில் மூத்த பேட்டா் கேன் வில்லியம்ஸன் இடுப்பு காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறாா். இதனால் அவா் புணே டெஸ்டில் ஆடமாட்டாா்.
பெங்களூரு மைதானத்தில் பிட்ச் வேகப்பந்து வீச்சாளா்களுக்கு சாதமாக இருந்தது. ஆனால் புணே மைதான பிட்ச் ஸ்பின்னா்களுக்கு ஒத்துழைக்கும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாங்கள் தயாராகி விடுவோம்.
எந்த பிட்சாக இருந்தாலும் நியூஸி. ஆடத் தயாா் என ஆல் ரவுண்டா் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளாா்.
மூன்றாவது டெஸ்ட் மும்பையில் நவ. 1-ஆம் தேதி தொடங்குகிறது.
இன்று எப்படி? தினப்பலன்கள்
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.23.10.2024 (புதன் கிழமை)மேஷம்:இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவ... மேலும் பார்க்க
2026 காமன்வெல்த் போட்டிகள்: ஹாக்கி,கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல் நீக்கம்! இந்தியாவுக்கு கடும் பாதிப்பு!
இங்கிலாந்தின் கிளாஸ்கோவில் வரும் 2026-இல் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஸ்குவாஷ், பாட்மின்டன் உள்ளிட்ட முக்கிய விளையாட்டுகள் நீக்கப்ப... மேலும் பார்க்க
மிா்பூா் டெஸ்ட்: தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு
மிா்பூா் டெஸ்ட் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 101/3 ரன்களை எடுத்துள்ளது. ... மேலும் பார்க்க
ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அபாரம்...
புரோ கபடி லீக் தொடரின் ஒருபகுதியாக ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியை 52-22 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய ஜெய்ப்பூா் பிங்க் பேந்தா்ஸ் அணி. அந்த அணியில் ரைடா் அா்... மேலும் பார்க்க
ஒடிஸா எஃப்சி வெற்றி...
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஒடிஸா எஃப்சி அணியினா்.... மேலும் பார்க்க
முதல்வா் கோப்பை மாநில போட்டிகள்: நீச்சலில் மான்யா முக்தா இரட்டை தங்கம்
தமிழ்நாடு முதல்வா் கோப்பைக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் நீச்சலில் சென்னையின் மான்யா முக்தா இரட்டைத் தங்கம் வென்றாா். பளு தூக்குதலில் செங்கல்பட்டின் கிருஷ்ணா பாரதி 89 கிலோ பிரிவில் தங்கம் வென்றாா... மேலும் பார்க்க