செய்திகள் :

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் தேர்தலில் போட்டியிட முடியும்! சந்திரபாபு நாயுடு

post image

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டு வரப் போவதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திர மக்கள்தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை மற்றும் நாட்டின் மக்கள்தொகை சமநிலையை கருத்தில் கொண்டு அதிக குழந்தைகளை மக்கள் பெற்றுக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதி வளர்ச்சித் திட்டப் பணிகளை சனிக்கிழமை தொடங்கி வைத்த சந்திரபாபு நாயுடு, நாட்டின் மக்கள்தொகை விகிதம் குறித்து கவலைத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

அப்போது அவர் பேசியதாவது:

“ஜப்பான், சீனா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையில் அதிகளவிலான வயதானவர்கள் உள்ளதால் விளைவுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரத்தில் மக்கள்தொகையில் வயதானவர்கள் அதிகரிக்கும் அறிகுறிகள் பிரச்னை எழுந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 2047 வரை மக்கள்தொகையில் சமநிலையை தக்க வைத்துக் கொண்டாலும், தென் மாநிலங்களின் மக்கள்தொகை விளைவுகளை சந்திக்க தொடங்கிவிட்டன.

கிராமங்களில் இருந்து இளைஞர்கள் வெளியேறி, வேலைவாய்ப்பை தேடி நகரங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர். இதனால் கிராமங்களில் முதியவர்கள் மட்டுமே வசிக்கின்றனர்.

தேசிய கருவுறுதல் சராசரியான 2.1-ஆக இருக்கும் நிலையில், தென் மாநிலங்களில் மிகவும் குறைவாக 1.6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இது தொடர்ந்தால், 2047-க்குள் ஆந்திரம் கடுமையான முதுமைப் பிரச்னையை சந்திக்க நேரிடும். இதனை தவிர்க்க, நாம் இப்போது இருந்தே செயல்பட வேண்டும்.

இதனால், ஆந்திரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வரத் திட்டமிட்டு வருகிறோம்.

இந்த நடவடிக்கையானது, மக்கள் அதிக குழந்தைகளை பெற ஊக்குவிப்பதாகும். வரும் காலங்களில் துடிப்பான அதிகளவிலான இளைஞர்கள் இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்தைக் கொண்டதாகும்” எனத் தெரிவித்தார்.

உ.பி., இடைத்தேர்தலில் சமாஜவாதி மிகப்பெரிய வெற்றி பெறும்: டிம்பிள் யாதவ்

உத்தரப் பிரதேச மாநில இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி மாபெரும் வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவியும் எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் தெரிவித்தார். மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: பாஜகவுடன் உத்தவ் தாக்கரே (சிவசேனை) பேச்சுவார்த்தை?

இந்திய அரசமைப்பின் எதிரிகளை வீழ்த்த எதிர்க்கட்சிகளுக்கு சிவசேனை(உத்தவ் அணி) கட்சி அழைப்பு விடுத்துள்ளது.மகாராஷ்டிரத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு நவம்பா் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்... மேலும் பார்க்க

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு ராகுல் காந்தி! - ஒடிசா நடிகர் பதிவால் சர்ச்சை

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜெர... மேலும் பார்க்க

ஹரியாணா: அக்.25ல் தற்காலிக அவைத் தலைவராகப் பதவியேற்கிறார் ரகுவீர் சிங்!

சண்டீகர்: ஹரியாணா சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அக்டோபர் 25-ம் தேதி பதவியேற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 15வது ஹரியாணா சட்டப் பேரவையின் தற்காலிக அவைத்தல... மேலும் பார்க்க

101-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் வி.எஸ்.அச்சுதானந்தன்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான வி.எஸ்.அச்சுதானந்தன் தனது 101-ஆவது பிறந்த நாளை ஞாயிற்றுக்கிழமை (அக். 20) கொண்டாடினாா். கேரள முதல்வா் பினராயி விஜயன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநி... மேலும் பார்க்க

போலி வெடிகுண்டு மிரட்டல்கள்... குற்றவாளிகள் விமானங்களில் பறக்கத் தடையா?

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றவாளிகளை விமானங்களில் பறப்பதற்கானத் தடை பட்டியலில் சேர்க்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இருப்பதாக சிவில் விமான போக்குவரத்துத் துற... மேலும் பார்க்க