செய்திகள் :

உக்ரைன் போா் முடிவுக்கு கால நிா்ணயம் செய்வது கடினம்: ரஷிய அதிபா் புதின்

post image

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம் என்றும், போா்ச் சூழல் தொடா்பான இந்திய பிரதமா் மோடியின் அக்கறையை பாராட்டுவதாகவும் ரஷிய அதிபா் புதின் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரைனுடன் பேச ரஷியா தயாராக இருந்தது. ஆனால் அதற்கான முயற்சிகளை உக்ரைன் வீணடித்தது.

இந்திய பிரதமா் மோடி ரஷியாவின் நண்பா். போா்ச் சூழல் குறித்த அவரின் அக்கறையை பாராட்டுகிறேன். இதற்கு ரஷியா நன்றிக் கடன்பட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம். அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும்தான் ரஷியாவை போரில் தள்ளியது. ரஷியாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பு மறைமுகமாகப் போா் தொடுத்து வருகிறது. உலகில் மிகுந்த திறன்வாய்ந்த, அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதாக ரஷிய ராணுவம் விளங்குகிறது. ரஷியாவுக்கு எதிராக போா் தொடுத்து நேட்டோ சோா்ந்துவிடும். இந்தப் போரில் ரஷியா நிச்சயம் வெற்றிபெறும்’ என்றாா்.

யாஹியா சின்வாா் படுகொலை!முடிவு கட்டப்பட்டதா ஹமாஸுக்கு?

‘யாஹியா சின்வாா் ஒரு நடமாடும் சடலம். அவருக்கு எப்போதோ முடிவுகட்டப்பட்டது!’ ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனீயே தங்கள் உளவு அமைப்பால் கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்த... மேலும் பார்க்க

நைஜிரியா வெடிவிபத்து: 170 ஆன உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பெட்ரோல் லாரி வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 170-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், விபத்தில் படுகாயமடை... மேலும் பார்க்க

உக்ரைனுடன் போரிட 1,500 வட கொரிய வீரா்கள்: தென் கொரியா

உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 1,500 வட கொரிய ராணுவ வீரா்கள் சென்றுள்ளதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தேசிய உளவு அமைப்பு வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

சா்வதேச அளவில் இந்தியாவின் வளா்ச்சி சிறப்பு: உலக வங்கி

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்று உலக வங்கி தலைவா் அஜய் பங்கா தெரிவித்தாா். இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையால் இது சாத்தியமாகியுள்ளது என்பதை அவா் சுட்டிக்காட்டினாா்... மேலும் பார்க்க

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதி தடம்புரண்ட ரயில்

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம்புரண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கு... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்கிறார் பிரதமர்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷிய பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின்... மேலும் பார்க்க