ஏழுமலையான் தரிசனம்: 10 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் திங்கள்கிழமை தா்ம தரிசனத்தில் 10 மணி நேரம் காத்திருந்தனா். தெரிவித்துள்ளது.
பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.46 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 82, 721 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 261 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.