செய்திகள் :

ஒரே பதிவெண்ணில் இயக்கப்படும் 3 அரசு பேருந்துகள்? - போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுவது என்ன?

post image

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளில், மூன்று பேருந்துகளுக்கு `TN74 N 1813' என்ற ஒரே பதிவெண் உள்ளதாக, சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவிவருகின்றன. அதில் ஒரு பேருந்து 431 திருவனந்தபுரம் எனவும், மற்றொரு பேருந்து 9-ஏ மேல்மிடாலம் எனவும்... மற்றொரு பேருந்து 9-ஏ மகளிர் விடியல் பேருந்து மேல்மிடாலம் எனவும் போர்டு வைத்து வெவ்வேறு வண்ணங்களில் இயங்குவதாக புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தன.

அரசு போக்குவரத்துக் கழகமே அரசை ஏமாற்றுவதாகவும் கருத்துகள் எழுந்தன. இந்த நிலையில், இதில் உண்மை இல்லை எனவும், இதனை பலர் அறியாமையால் பகிர்ந்து வருவதாகவும், நாகர்கோவில் போக்குவரத்து கழகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் மெர்லின் ஜெயந்தி கூறுகையில், "இந்த பேருந்து வந்த புதிதில் 08.02.2017 அன்று புறநகர் பேருந்தாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்டது. அப்போது அந்த பேருந்தில் பச்சை வண்ண பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது.

ஒரே பதிவெண் கொண்ட அரசுப் பேருந்து

பிறகு, TN74 N 1813 அதே பேருந்தின் வண்ணம் மாற்றப்பட்டு எஃப்.சி காட்டப்பட்டு, 04.01.2020 முதல் நகரப் பேருந்தாக மேல்மிடாலத்துக்கு இயக்கப்பட்டது. பின்னர் அரசு ஆணைப்படி அந்த பேருந்தின் கூண்டு புதுப்பிக்கப்பட்டு 07.10.2023 முதல் நாகர்கோவில் மேல்மிடாலம் வழித்தடத்தில் மகளிர் விடியல் பேருந்தாக இயக்கப்படுகிறது.

ஒரே பதிவெண் கொண்ட பேருந்து

ஒரே பதிவெண் கொண்ட மூன்று பேருந்துகள் அல்ல, ஒரே பேருந்துதான். மூன்று கட்டங்களில், மூன்று தோற்றங்களில், மூன்று வழித்தடங்களில் ஓடியது. இதில் எந்த குழப்பமும், சர்ச்சையும் இல்லை. ஆனால் இதையே ஒரு சர்சையாக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தையும், தமிழக அரசயையும் குறை கூறி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள். இப்படி பொய்யாக சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

ஒரே பேருந்து வண்ணம் மாறும்போதெல்லாம் போட்டோ எடுத்து வைத்துவிட்டு, இப்போது பதிவிட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து: `நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்' - கமல் கண்டனம்

ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று கலந்துகொண்ட தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சியின் பொன்விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது ஏற்பட்ட குழப்பத்தில், `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' வ... மேலும் பார்க்க

`துணையாக இருக்க மட்டும்தான் துரைமுருகன்; துணை முதல்வர் என்றால் அது உதயநிதிதான்' - ஆர்.பி.உதயகுமார்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் புதூரில் அ.தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார் மற்றும் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்... மேலும் பார்க்க

2026: திமுக-வில் சீனியர்களுக்கு வேட்டு? ; பொன்முடியின் ‘சீட்’ பேச்சு - பின்னணி என்ன?!

`சீட் கிடைக்காமல் போகலாம்!'விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், அமைச்சருமான பொன்முடி பேசும்போது, "விழுப்புரம் மாவட்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `ஆளுநருக்குச் சில கேள்விகள்..!" - முதல்வர் ஸ்டாலின்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க

ஸ்டாலினிடம் சரணடைந்த Thiruma, Congress, CPM, CPI? கொதிக்கும் நிர்வாகிகள் - கூட்டணி குஸ்தி! JV Breaks

திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்து ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திமுக ஆட்சியின் மீதும் எக்கச்சக்கமான புகார்கள், குற்றச்சாட்டுகள் உள்ளன . விசிக மது ஒழிப்பு ... மேலும் பார்க்க