``மத சட்டங்களால், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை மீற முடியாது..'' - உச்ச நீ...
இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா வருகை!
இலங்கை கடற்படை கைது செய்த 17 இந்திய மீனவர்கள் இந்தியா திரும்பி விட்டதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இந்திய மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், 17 இந்திய மீனவர்களையும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை: தமிழக அரசு
இருநாட்டினரும் கவனக்குறைவாக கடல் எல்லையை மீறுவதாகக் கூறி, இருநாட்டு மீனவர்களும் அடிக்கடி கைது செய்யப்படுகிறார்கள். குறிப்பாக, இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடுகூட சில சமயங்களில் நடத்துகின்றனர்.
இலங்கை கடற்படையின் அதிகாரபூர்வ வெளியீட்டின்படி, நடப்பாண்டில் மட்டும் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களின் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் கேஜரிவால் ஆலோசனை!
தில்லியில் சட்டப்ரேவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பிடம்புரா பகுதியில் ஆம் ஆத்... மேலும் பார்க்க
கார் மோதி 6 பேர் பலி!
பிகாரில் கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.பிகாரின் பாங்கா மாவட்டத்தில் வேகமாக வந்த எஸ்யூவி ரகக் கார் ஒன்று, வெள்ளிக்கிழமை (அக். 18) இரவு 8.30 மணியளவில் பாதசாரிகளின் மீது மோதி விபத்துக்குள்ளானத... மேலும் பார்க்க
போதைப்பொருள் வைத்திருந்த கேரள நடிகை கைது!
கேரளத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நடிகையை காவல்துறையினர் கைது செய்தனர்.கேரளத்தில் பாலக்காட்டைச் சேர்ந்த நடிகை ஷம்நாத் (34) போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ... மேலும் பார்க்க
தில்லியில் மோசமான காற்று மாசுக்கு பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளே காரணம்!
தேசிய தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆகிய இரு கட்சிகளும் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர... மேலும் பார்க்க
மீண்டும் வன்முறை! மணிப்பூரில் என்ன நடக்கிறது?
மணிப்பூரில் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மெய்தி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் குக்கி பழங்குடியினரும... மேலும் பார்க்க
பத்திரிகையாளர்களுடன் பேசிய காவலில் இருந்த குற்றவாளி! 3 காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!
காவல் கண்காணிப்பில் இருந்த பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த யோகேஷ், பத்திரிகையாளர்களுடன் பேசும் விடியோ வைரலானதால், காவலில் இருந்த அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.பிஷ்னோய் கும்பலுடன் தொடர்புடையதாகக... மேலும் பார்க்க