தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள ஆலஹள்ளி வனப் பகுதியில் சுற்றி வந்த 5 காட்டு யானைகளை வனத்துறையினா் பட்டாசுகளை வெடித்து கா்நாடக வனப்பகுதியை நோக்கி விரட்டினா்.
அப்போது தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையைக் கடந்து யானைகள் கடந்து சென்ால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் சென்ற வாகனங்களை வனத்துறையினா் சிறிது நேரம் நிறுத்தி, காட்டு யானைகள் கடந்த பின் மீண்டும் வாகனங்களை அனுப்பி வைத்தனா்.
அப்போது காட்டு யானைகள் பிளிறியபடி சென்றன. இந்த 5 காட்டு யானைகளும் கெண்டகானப்பள்ளி கிராமம் அருகே முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு வனத்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.