செய்திகள் :

குப்பையில் கிடைத்த தங்க மோதிரத்தை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு குவியும் பாராட்டு!

post image

திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் போது கிடைத்த தங்க மோதிரத்தை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை பாராட்டியது.

திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிா்வாகம் ஆறுகண் பாலம் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பது வழக்கம். இவ்வாறு தரம் பிரிக்கும் போது, குப்பையில் 5 கிராம் தங்க மோதிரம் இருந்தது. இதை நகராட்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் காளிமுத்து, செந்தில்குமாா் ஆகியோா் எடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, நகராட்சி நிா்வாகம் யாருடைய மோதிரம் என விசாரித்த போது, அது திருங்கலத்தைச் சோ்ந்த நாகராஜ் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது. பின்னா், மோதிரம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிக்க |ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!

இதையடுத்து அவரும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நகராட்சி நிா்வாகம் தங்க மோதிரத்தை நோ்மையாக ஒப்படைத்த நகராட்சி ஒப்பந்தத் தொழிலாளா்களை நகா்மன்றத் தலைவா் ரம்யா முத்துக்குமாா், துணைத் தலைவா் ஆதவன்அதியமான் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டி சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கினா்.

நகராட்சி ஆணையா் அசோக்குமாா், பொறியாளா் ரத்தினவேலு உள்ளிட்டோரும் ஒப்பந்தப் பணியாளா்களைப் பாராட்டினா்.

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வதந்திகள் பெரும் சவால்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் சமூகவலைதளத்தில் பரவும் வதந்திகள் பெரும் சவாலாக உள்ளன. சமூகவலைதள வதந்திகளை கண்காணித்து மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி... மேலும் பார்க்க

ஆளுநர் விழாவில் சரியாகப் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று(சனிக்கிழமை) கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப்பட்டது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொ... மேலும் பார்க்க

தமிழ் பேசத் தெரிந்தவர்தான் அடுத்த பிரதமர்! பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் கணிப்பு

அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்று தமிழ்நாட்டின் பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பான ‘ஒளிமயமான எதிர... மேலும் பார்க்க

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

இரிடியம் தருவதாகக் கூறி கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக 4 பேரை கைது செய்து, 7 பேர் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கேரள மாநிலம், பாலக்காடு, காரக்குறிச... மேலும் பார்க்க

பெண்களை தவறாக விடியோ எடுத்த போக்குவரத்து காவலர்: பிடித்து கொடுத்த பொதுமக்கள்!

கோவை சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே பெண்களை தவறாக விடியோ போக்குவரத்து காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.கோவை சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க

மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது ... மேலும் பார்க்க