செய்திகள் :

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

post image

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதுபோன்று கேரளா பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததற்கு ஆளும் சி.பி.எம் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்த திட்டம் குறித்தும் ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் இதுபோன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநிலத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஏழு பேர் கொண்ட அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணைக் குழுவிற்கு பொதுக் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தலைவராகவும்,  அமைச்சர்கள் கே.ராஜன், பி.பிரசாத், ரோஷி அகஸ்டின், பி. ராஜீவ், ஏ.கே.சசீந்திரன், கே. கிருஷ்ணன்குட்டி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். துணைக்குழுவின் ஆய்வு அறிக்கை வெளியிடப்படும் வரை திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த விவரம் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

P.M Shri
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா

உலகுக்கே முன்மாதிரியாக அதிதீவிர வறுமை ஒழிப்பு நிலையை கையில் எடுத்துள்ளோம். அதன் ஒருபாகமாக பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் தொடங்கப்படும். சமூக பென்சன் பெறாத சமூகத்தில் பின்தங்கிய பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு மாதம் 1000 ரூபாய் பெண்கள் பாதுகாப்பு பென்சன் வழங்கப்படும். 35 வயது முதல் 60 வயது வரையிலான 33,34,000 பெண்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டுக்கு 3800 கோடி ரூபாய் செலவிடப்படும். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கும் திட்டத்தின்படி 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிகிரி-க்கு பிறகு பயிற்சி வகுப்புகளில் படிப்பவர்களுக்கும், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக அரசு ஆண்டுக்கு 600 கோடி செலவிடும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

குடும்பத்தின் ஐஸ்வர்யம் என்ற அடிப்படையில் பெண்களுக்கு குடும்பஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய பெண்கள் கூட்டமைப்பாகும். குடும்பஸ்ரீ அமைப்பின் 19470 ஏரியா டெவலப்மெண்ட் சொசைட்டிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஆண்டுக்கு 23.40 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த 3-ம் புதிய திட்டங்களாகும். சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு சமூக பாதுகாப்பு பென்சன் மாதம் 1600 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதை மாதம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நெல் கொள்முதல் விலையாக கிலோவுக்கு 28.20 வழங்கப்படுகிறது. அது 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி நெருக்கடி தந்தபோதும் இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்துகிறோம். அனைத்து திட்டங்களும் நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்" என்றார்.

உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வரிகளை விதித்து தள்ளியிருக்கிறார். இந்த வரிகள் அமெரிக்காவிற்கு அதிக பணத்தைக் கொண்டு வரும். இதனால், அமெரிக்காவின் கடன்களை வெகுவாக குறைக்கலாம். அமெரிக்க மக்களு... மேலும் பார்க்க

SIR Explained in Tamil : நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் SIR எப்படி நடத்தப்படுகிறது? இந்த செயல்முறையில் வாக்காளர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஏன் இதைச் சுற்றி பல விமர்சனங்கள் எழுந்துள்ளன? இந்த வீடியோவில், SIR எப்படி செயல்படுகிறது, யார் நடத்துகி... மேலும் பார்க்க

பீகார்: ``வாக்குகளுக்காக மோடி நடனம் கூட ஆடுவார்'' - ராகுல் காந்தி பேச்சு; பாஜக கடும் எதிர்ப்பு

பீகாரின் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, இந்தியா கூட்டணியும் தேசிய முற்போக்கு கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பிரசாரத்தில் இரு கூட்டணிகளும் ... மேலும் பார்க்க

முதல்முறையாக சந்தித்துகொள்ளும் ட்ரம்ப், ஜின்பிங்: ஏன் இது முக்கியம்? இருவரின் எதிர்பார்ப்புகள் என்ன?

தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தற்போது நடந்து வருகிறது. தான் முதல்முறையாக அமெரிக்க அதிபராக இருந்தபோது ஜின்பிங்கை சந்தித்த ட்ரம்ப், இப்போது தான் மீண்டும் ... மேலும் பார்க்க

``2026 - ல் பாஜக தமிழ்நாட்டில் காணாமல் போகும்; மீண்டும் திமுக 2.0 தொடரும்!'' - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் பூங்கா முன்பு அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவி குழுவினரால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியை தம... மேலும் பார்க்க

``2 நாள் உனக்கு டைம்; என்னுடைய வீரியத்தை பார்ப்பாய்'' - பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசிய விசிக மா.செ

கன்னியாகுமரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பாரதி. சமீபத்தில், நாகர்கோவில் அருகே உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து, அனுமதியின்றி இயங... மேலும் பார்க்க