செய்திகள் :

``2 நாள் உனக்கு டைம்; என்னுடைய வீரியத்தை பார்ப்பாய்'' - பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசிய விசிக மா.செ

post image

கன்னியாகுமரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பாரதி. சமீபத்தில், நாகர்கோவில் அருகே உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து, அனுமதியின்றி இயங்கி வருவதாக கூறி மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு ஆதரவாக நேற்று நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ரெட் ஸ்டார்) மாவட்ட செயலாளர் மணவை கண்ணன் ஆகியோர் மிகவும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளால் பெண் அதிகாரி பாரதியை விமர்சித்து பேசியுள்ளனர்.

வி.சி.க ஆர்ப்பாட்டம்
வி.சி.க ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அல்காலித் பெண் அதிகாரி குறித்து பேசியதாவது:

"உனக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் இருக்கிறது. ஒரு கம்பெனியை மூடுவதற்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? அட நாயே, உனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? லஞ்சப் பேர்வழி பாரதியே, தைரியம் இருந்தால் நீ வந்து பண்ணிப்பார். இரண்டு நாட்கள் உனக்கு டைம் தருகிறேன்; அதற்குள் மின் இணைப்பை வைக்காவிட்டால் அப்போது என்னுடைய வீரியத்தை நீ பார்ப்பாய். பாரதிக்கு நேரடியாக சவால் விடுகிறேன்- அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என்று நீ பார்ப்பாய்.

அந்த சீட்டில் இருந்து நீ சஸ்பெண்ட் செய்யப்படுவாய். அதற்கான வேலைகளை விடுதலை சிறுத்தைகளும் அந்த நிறுவனமும் எடுக்கும். முறையான சில அனுமதிகள் அங்கு இல்லை; அதற்கான நடவடிக்கைகள் நடந்துக்கொண்டிருக்கின்றன. அதற்காக அந்த கம்பெனியை மூடிவிடுவாயா? உனக்கு தெம்பு இருந்தால், நாணம் இருந்தால் என்மீது மானநஷ்ட வழக்கு போடு."

இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

வி.சி.க மாவட்டச் செயலாளர் அல்காலித்

பெண் அதிகாரியை “நாய்” எனவும் “சங்கி” எனவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசியதாக, அதிகாரி பாரதி வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில், பேக்கரி உரிமையாளர் முகமது இஸ்மாயிலின் தூண்டுதலின் பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் மற்றும் மணவை கண்ணன் ஆகியோர் சிலருடன் போராட்டம் நடத்தி, தன்னை அவதூறாகப் பேசி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு, பெண் அதிகாரி பாரதியின் புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அல்காலித், மணவை கண்ணன் மற்றும் பேக்கரி உரிமையாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வரிகளை விதித்து தள்ளியிருக்கிறார். இந்த வரிகள் அமெரிக்காவிற்கு அதிக பணத்தைக் கொண்டு வரும். இதனால், அமெரிக்காவின் கடன்களை வெகுவாக குறைக்கலாம். அமெரிக்க மக்களு... மேலும் பார்க்க

SIR Explained in Tamil : நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் SIR எப்படி நடத்தப்படுகிறது? இந்த செயல்முறையில் வாக்காளர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஏன் இதைச் சுற்றி பல விமர்சனங்கள் எழுந்துள்ளன? இந்த வீடியோவில், SIR எப்படி செயல்படுகிறது, யார் நடத்துகி... மேலும் பார்க்க

பீகார்: ``வாக்குகளுக்காக மோடி நடனம் கூட ஆடுவார்'' - ராகுல் காந்தி பேச்சு; பாஜக கடும் எதிர்ப்பு

பீகாரின் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, இந்தியா கூட்டணியும் தேசிய முற்போக்கு கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பிரசாரத்தில் இரு கூட்டணிகளும் ... மேலும் பார்க்க

முதல்முறையாக சந்தித்துகொள்ளும் ட்ரம்ப், ஜின்பிங்: ஏன் இது முக்கியம்? இருவரின் எதிர்பார்ப்புகள் என்ன?

தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தற்போது நடந்து வருகிறது. தான் முதல்முறையாக அமெரிக்க அதிபராக இருந்தபோது ஜின்பிங்கை சந்தித்த ட்ரம்ப், இப்போது தான் மீண்டும் ... மேலும் பார்க்க

``2026 - ல் பாஜக தமிழ்நாட்டில் காணாமல் போகும்; மீண்டும் திமுக 2.0 தொடரும்!'' - அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் பூங்கா முன்பு அமைக்கப்பட்டுள்ள மகளிர் சுயஉதவி குழுவினரால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியை தம... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு திருப்பூர் வந்த சி.பி.ராதாகிருஷ்ணன்; பிரமாண்ட வரவேற்பு |Photo Album

திருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூரில் வரவேற்புதிருப்பூர் ... மேலும் பார்க்க