செய்திகள் :

சமையல் நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடிகை சீதா!

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை சீதா விலகியுள்ளார்.

தற்போது சமையல் தொடர்பான நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களிடையே பெரும் வரவேற்புப் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி 5 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அதேபோல், குக் வித் கோமாளிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியும் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமையல் எக்ஸ்பிரஸ் என்ற புதிய சமையல் நிகழ்ச்சி கடந்த செப். 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: மலையாளத்தில் நடிக்கும் தமிழ் சீரியல் நடிகை!

சுஜிதா

சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியை சின்னத்திரை நடிகை ஆயிஷா தொகுத்து வழங்கிவருகிறார். நடுவர்களாக நடிகை சீதா, புதுச்சேரி இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்னசி பங்கேற்று இருந்தனர்.

இந்த நிலையில், சில தனிப்பட்ட காரணங்களால் இந்நிகழ்ச்சியில் இருந்து நடிகை சீதா விலகியதாகக் கூறப்படுகிறது. சீதாவுக்கு பதில் புதிய நடுவராக சின்னத்திரை நடிகை சுஜிதா பங்கேற்றுள்ளார்.

முன்னதாக, நடிகை சுஜிதா குக் வித் கோமாளி -5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியில் சுஜிதா பங்கேற்றுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியில் உள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நெடுந்தீவு கடல்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 16 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். ம... மேலும் பார்க்க

மதுரை: 3 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை!

மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மருதுபாண்டியா்களின் 223-ஆவது நினைவு நாள் அரசு விழாவாக வருகிற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியா்களின் நினைவு ... மேலும் பார்க்க

தவெக மாநாடு: 234 வழக்குரைஞர்கள் நியமனம்!

தவெக மாநாட்டிற்காக 234 தொகுதிகளுக்கும் பொறுப்பு வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

ஜோசியராக மாறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: முதல்வர்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஜோசியராக மாறியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களி... மேலும் பார்க்க

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்திய மதிப்பில் ரூ.420 கோடி நன்கொடையாக அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அரசியல் தலைவர்... மேலும் பார்க்க

பெங்களூரு விபத்து: கட்டட உரிமையாளரின் மகன் கைது!

பெங்களூரில் கட்டுமானப் பணியில் இருந்த 7 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளரின் மகன் மோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழ... மேலும் பார்க்க