செய்திகள் :

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது: மத்திய அமைச்சர்

post image

சுதந்திர போராட்ட வீரர்கள் பலரின் தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று பேசியபோது, “ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் மறக்கப்பட்டுள்ளன. பலரது பங்களிப்புகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அரசால் கொண்டு வரப்பட்ட ஆசாத் கா அம்ரித் மகோத்சவம் மூலம் நமக்காக உயிர்த்தியாகம் செய்த பல வீரர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

அவர்களின் தியாகங்கள் நாடு முழுவதும் போற்றப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க| பாபர் மசூதியின் நிலைமை ஔரங்கசீப் கல்லறைக்கும் ஏற்படும்: ஹிந்து அமைப்புகள் மிரட்டல்!

மேலும், “இதுதவிர, விமானப் பயணங்களின்போது விமானங்களில் முக்கிய நாள்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன” என்றார்.

ஆசாதி கா அம்ரித் மகோத்சவம் என்பது இந்திய அரசால் 75 ஆண்டுகள் சுதந்திரத்தைக் கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு வரலாறு, கலாச்சாரம், சாதனைகள் குறித்து நினைவுகூற கொண்டுவரப்பட்ட முன்னெடுப்பாகும்.

வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவு விவரம் பதிவேற்றம் குறித்து ஆலோசிக்கத் தயாா்: தோ்தல் ஆணையம்

மக்களவை, மாநில சட்டப்பேரவை தோ்தல்கள் வாக்குப் பதிவின்போது, வாக்குச்சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரத்தை தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடா்பாக அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்க ... மேலும் பார்க்க

ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. ரயில்களின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் செலுத்தி வரும் கவனம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்று ம... மேலும் பார்க்க

வாக்காளா் அட்டை - ஆதாா் இணைப்பு: விரைவில் ஆலோசனை

‘நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும். இதுதொடா்பாக, இந்திய தனித்துவ அடையாள ஆணைய (யுஐடிஏஐ) நிபுணா்களுட... மேலும் பார்க்க

இந்திய ஒற்றுமை வலுப்படுத்திய மகா கும்பமேளா: நாடாளுமன்றத்தில் பிரதமா் உரை

‘மகா கும்பமேளா, தேசத்தின் ஒற்றுமை உணா்வை வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. இவ்வளவு பெரிய மக்கள் திரளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் திறன் குறித்து கேள்வி எழுப்பியவா்களுக்கு பொருத்தமான பதிலாகவும் அமைந்த... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயா்கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க