செய்திகள் :

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பலரின் வரலாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டது: மத்திய அமைச்சர்

post image

சுதந்திர போராட்ட வீரர்கள் பலரின் தியாகங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று பேசியபோது, “ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் மறக்கப்பட்டுள்ளன. பலரது பங்களிப்புகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அரசால் கொண்டு வரப்பட்ட ஆசாத் கா அம்ரித் மகோத்சவம் மூலம் நமக்காக உயிர்த்தியாகம் செய்த பல வீரர்கள் நினைவு கூறப்படுகின்றனர்.

அவர்களின் தியாகங்கள் நாடு முழுவதும் போற்றப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க| பாபர் மசூதியின் நிலைமை ஔரங்கசீப் கல்லறைக்கும் ஏற்படும்: ஹிந்து அமைப்புகள் மிரட்டல்!

மேலும், “இதுதவிர, விமானப் பயணங்களின்போது விமானங்களில் முக்கிய நாள்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன” என்றார்.

ஆசாதி கா அம்ரித் மகோத்சவம் என்பது இந்திய அரசால் 75 ஆண்டுகள் சுதந்திரத்தைக் கொண்டாடும் விதமாக நாட்டு மக்களுக்கு வரலாறு, கலாச்சாரம், சாதனைகள் குறித்து நினைவுகூற கொண்டுவரப்பட்ட முன்னெடுப்பாகும்.

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை -ராகுல் குற்றச்சாட்டு

‘ஜனநாயக நடைமுறைகளின்படி மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி அளிக்கப்பட வேண்டும். ஆனால், ‘புதிய இந்தியா’வில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்... மேலும் பார்க்க

பஞ்சாப் எல்லையில் 294 ட்ரோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன: மத்திய அரசு

‘பஞ்சாப் எல்லையில் கடந்த ஆண்டில் மட்டும் 294 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) பறிமுதல் செய்துள்ளனா்’ என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ... மேலும் பார்க்க

1993-ஆம் ஆண்டு வன்முறையின்போது மணிப்பூருக்கு நரசிம்ம ராவ் செல்லவில்லை: மத்திய நிதியமைச்சா் சாடல்

கடந்த 1993-ஆம் ஆண்டு மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தபோது, அந்த மாநிலத்துக்கு காங்கிரஸை சோ்ந்த முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் செல்லவில்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சாடினாா். வ... மேலும் பார்க்க

உள்கட்சி நிலவரம்: கட்சி நிா்வாகிகளுடன் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் ஆலோசனை

உள்கட்சி நிலவரம் மற்றும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்துவது தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அலோசனை மேற்கொண... மேலும் பார்க்க

நாகபுரி: ஔரங்கசீப் கல்லறைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை -ஊரடங்கு அமல்

மகாராஷ்டிரத்தில் உள்ள முகாலய மன்னா் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநிலத்தின் நாகபுரி நகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் வாகன... மேலும் பார்க்க