செய்திகள் :

சுமங்கலி விரதம் முடித்து, கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி... என்ன நடந்தது?

post image

வட இந்தியாவில் கணவன் நீண்ட நாள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதற்காக பெண்கள் கர்வா செளத் எனப்படும் ஒரு வித பண்டிகையை கொண்டாடுவர். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து நிலவு வெளிச்சத்தில் கணவன் முகத்தை பார்ப்பது வழக்கம். பாலிவுட் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, சோனாக்‌ஷி சின்ஹா, கேத்ரீனா கைஃப் போன்ற முன்னணி நடிகைகள் இந்த விரதத்தில் கலந்து கொண்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கெளஷாம்பி மாவட்டத்தில் உள்ள இஸ்மாயில்பூர் லால்பகதூர் சாஸ்திரி நகரில் வசிக்கும் சவிதா என்ற பெண்ணும் தனது கணவன் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று வேண்டி விரதம் இருந்தார். மாலையில் விரதத்தை முடித்துக்கொண்ட பிறகு தனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சண்டை முடிந்த பிறகு கணவர் சைலேஷிற்கு சவிதா சாப்பாடு வைத்துக்கொடுத்தார். ஆனால் சாப்பிட்ட சிறிது நேரத்தில் சைலேஷ் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

உடனே அவரை அவரது சகோதரர் அகிலேஷ் மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் வாக்குமூலம் கொடுத்துள்ள சைலேஷ், மனைவி தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அகிலேஷும் தனது சகோதரனுக்கு அவரது மனைவி சாப்பாட்டில் விஷம் வைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். சிகிச்சையின் போது சைலேஷ் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கணவன் இறந்துவிட்ட செய்தியை கேள்விப்பட்டதும் சவிதா தலைமறைவாகிவிட்டார். ஆனால் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். சைலேஷ் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Gujarat: 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோரிஸ் சாமுவேல் கிறிஸ்ட... மேலும் பார்க்க

"இர்ஃபான் செயல் கண்டிக்கத்தக்கது; புகார் அளித்துள்ளோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

`யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: "பிஷ்னோய்யை என்கவுன்ட்டர் செய்யும் போலீஸுக்கு சன்மானம்" - கர்மி சேனா சொல்வதென்ன?

மகாராஷ்டிராவில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் டெல்லி மாஃபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய அரசு தன... மேலும் பார்க்க

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 3 பேர் கைது... 17 ஆக உயர்ந்த மொத்த கைது; அதிர்ச்சி பின்னணி

கோவை, கோட்டை ஈஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதன் பின்னணிய... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: போலியான அரசு முத்திரை, கையொப்பம், ரசீது - காவல்துறையை அதிரவைத்த கனிமவள கடத்தல் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை வெட்டிஎடுத்து கேரளாவுக்குக் கடத்தும்கனிம வள கடத்தல் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதிலும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிக... மேலும் பார்க்க

ஹைதராபாத்: மதுபானக் கூடத்தில் ஆபாச நடனம்... பார்ட்டி - 40 இளம்பெண்கள் உட்பட 140 பேர் கைது!

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் ஆபாச நடனமாடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 இளம்பெண்கள் உள்பட மதுபோதையில் திளைத்த 140 பேரை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் கைது செய்து, மதுபானக் க... மேலும் பார்க்க