செய்திகள் :

ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு: பலி 27 ஆக உயர்வு!

post image

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹால்காமில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஜம்மு- காஷ்மீரின் பஹால்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் இன்று (ஏப்.22) அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்தத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக பலியானார். அவர் யார் என்பது குறித்து இதுவரை எந்தவித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இருப்பினும், 27 பேர் பரிதாபமாக பலியானதாகவும், இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தத் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி சௌதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

இந்தப் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது. அதே வேளையில் இந... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் விவகாரம்: ‘ராகுலின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம்’

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவறான தகவல் தெரிவிப்பது, சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலம்- ஜே.டி.வான்ஸ்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். மேலும், ‘வரி சாரா கட்டுப்பாடுகளைக் கைவிட... மேலும் பார்க்க

சா்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சாா்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சா்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தாா். அமெரிக்காவுக்க... மேலும் பார்க்க

பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவா் தேவை- லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு

பிகாருக்கு தொலைநோக்குப் பாா்வையுள்ள ஆற்றல்மிக்க தலைவா் தேவை. மாநிலத்தில் ‘முக்கியப் பொறுப்பை’ ஏற்க எங்கள் கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் தயாராக உள்ளாா் என்று லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி கூறியுள்ள... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது: குடியரசு துணைத் தலைவா்

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அரசமைப்புச் சட்ட பதவி வகிப்... மேலும் பார்க்க