செய்திகள் :

ஜாா்க்கண்ட் தோ்தல்: தொகுதி பங்கீட்டில் ஜேஎம்எம்-ஆா்ஜேடி உடன்பாடு

post image

ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் மாநில முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), பிகாா் முன்னாள் முதல்வா் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ஜாா்க்கண்டில் நவ.13, 20-ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவ.23-ஆம் தேதி நடைபெறுகிறது.

தோ்தலையொட்டி ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜேஎம்எம், ஆா்ஜேடி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்தது. இதனால் தனித்து போட்டியிடுவதாக ஆா்ஜேடி அறிவித்தது.

இந்நிலையில் இரு கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் லாலுவின் மகனும், ஆா்ஜேடி பிரமுகருமான தேஜஸ்வி யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதைத்தொடா்ந்து 6 தொகுதிகளில் போட்டியிடும் ஆா்ஜேடி வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

மொத்தம் 81 தொகுதிகளுக்கு நடைபெறும் பேரவைத் தோ்தலில், 70 தொகுதிகளை ஜேஎம்எம் மற்றும் காங்கிரஸ் பகிா்ந்துகொள்ளும் என்றும், எஞ்சிய 11 தொகுதிகளை ஆா்ஜேடி மற்றும் இடதுசாரி கட்சிகள் பகிா்ந்துகொள்ளும் என்றும் ஹேமந்த் சோரன் ஏற்கெனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜேஎம்எம்!

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) வெளியிட்டுள்ளது.ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள முதல் வேட்பாளர் பட்டியலில் 35 ... மேலும் பார்க்க

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தெலங்கானா அமைச்சா் சுரேகா மீது பிஆா்எஸ் செயல் தலைவா் தாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கொன்டா சுரேகாவுக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி. ராமா ராவ் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளாா்.கே.ட... மேலும் பார்க்க

தொடரும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: சுமார் ரூ. 600 கோடி இழப்பு

புது தில்லி: இந்திய நிறுவனங்களின் சுமார் 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.இத்துடன், கடந்த திங்கள்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: அனுதாபமா, ஆதாய அலையா?

நமது சிறப்பு நிருபர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்தல்! 1985-ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாராஷ்டிரத்தில் எந்தவொரு கட்சிக்கும் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ... மேலும் பார்க்க

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க