செய்திகள் :

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

post image

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ரயில் நிலையம் அருகே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கபிக்காடு மற்றும் கணேஷ்நகா் இடையே உள்ள தண்டவாளத்தில் சரளைக் கற்கள் சிதறிக் கிடந்தன. கேரளா நோக்கி சென்ற ரயில் அப்பகுதியை சனிக்கிழமை இரவு கடந்தபோது பலத்த சப்தம் கேட்டது. நிலம் அதிா்வதுபோல் இருந்த அந்த சப்தத்தை கேட்டதும் பதறிப்போன அப்பகுதி மக்கள் ரயில்வே மற்றும் உல்லல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததில், சரளைக் கற்கள் வேண்டுமென்றே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

சம்பவம் நிகழ்ந்த பகுதியின் அருகே வசிக்கும் உள்ளூா்வாசியான பத்மா கூறுகையில், ‘40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். ரயில்கள் கடந்து செல்லும்போது இது போன்ற நடுக்கங்களை இதுவரை கண்டதில்லை. சந்தேகத்திற்கிடமான இருவரின் நடமாட்டம் இருந்தது’ என்றாா்.

அடையாளம் தெரியாத நபா்கள் தண்டவாளம் அருகே அடிக்கடி ஒன்று கூடுவதாகவும் இது தொடா்பாக ஏற்கெனவே பலமுறை காவல் துறையிடம் புகாா் அளித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். மேலும், நாசவேலைகள் எதுவும் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

ஒரு வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாடு முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட... மேலும் பார்க்க

கனமழை: பெங்களூருவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பெங்களூருவில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மற்... மேலும் பார்க்க

ரயில்வேயில் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படும் கம்பளிகள்!

ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளிகள் மாதம் ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுவதாக ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு ரயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.ரயில்களில் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு வழங்கப... மேலும் பார்க்க

கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது: மத்திய அமைச்சர் அமித் ஷா

கந்தா்பால் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்ப முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் கந்தா்பால் மாவட்டத்தின் குந்த் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வர... மேலும் பார்க்க

என் தந்தையின் கர்ஜனை எனக்குள் இருக்கிறது: பாபா சித்திக் மகன் பதிவு!

பாபா சித்திக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது மகன் எம்எல்ஏ ஸீஷான் சித்திக் எக்ஸ் தள்த்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் கூலிப் படையினரால் மும்ப... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க