செய்திகள் :

ஒரு வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

நாடு முழுவதும் கடந்த ஒரே வாரத்தில் 90 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

ஆயுதப் பூஜை, துர்கா பூஜை, தீபாவளி எனப் பல்வேறு பண்டிகையின் காரணமாக கடந்த 10 நாள்களாக உள்நாடு மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்களில் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகின்றது.

இந்த நிலையில், அக்டோபர் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா உள்ளிட்ட நாட்டின் முன்னணி விமான நிறுவனங்களின் 90-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மிரட்டல் விடுக்கப்பட்ட விமானங்கள் அனைத்தும் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனை செய்ததில், அச்சுறுத்தல்கள் போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும், விமானங்கள் சரியான நேரத்தில் இயக்க முடியாதது, அவசர தரையிறக்கத்தால் விமான நிலையங்களின் அட்டவணை சீர்குலைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் விமானப் போக்குவரத்து துறையும் பயணிகளும் கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க : ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பாதுகாப்பு அதிகரிப்பு

விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, பண்டிகை காலங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பயணிகள் மற்றும் பிற ஊழியர்கள் தீவிர சோதனைக்கு பிறகே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒரு வெடிகுண்டு மிரட்டல்! விமான நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி நஷ்டம்!

ஒரே ஒருவர் விளையாட்டுக்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதால், ஒரு விமான நிறுவனம் சந்திக்கும் நஷ்டம் என்பது சற்றேறக்குறைய ரூ.3 கோடியாம்.அண்மையில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுப... மேலும் பார்க்க

சாலை விபத்து: உயிரிழப்பில் தமிழகத்துக்கு இரண்டாமிடம்!

நாடு முழுவதும் ஏற்படும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது.ஆனால், சாலை விபத்துகளால் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதா... மேலும் பார்க்க

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள், ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர... மேலும் பார்க்க

தலித் இளைஞர் கொலை வழக்கு: ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

தலித் இளைஞரின் கொலை வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பினிேபே விஸ்வரூப்பின் மகன் பினிபே ஸ்ரீகாந்தை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளார்.டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனச... மேலும் பார்க்க

புது வகை ஆன்லைன் மோசடி! ரூ. 60 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி! எப்படி நடந்தது?

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி 'இணையவழி கைது' எனும் ஆன்லைன் மோசடியால் ரூ. 60 லட்சத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி ஆன்லைன் பண மோசடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்... மேலும் பார்க்க

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் தேர்தலில் போட்டியிட முடியும்! சந்திரபாபு நாயுடு

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டு வரப் போவதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திர மக்கள்தொகையில... மேலும் பார்க்க