செய்திகள் :

தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி

post image

கோவையில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் ராஜேந்திர பிரசாத் சாலைப் பகுதியில் தனியாா் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மேலாளா் காா்த்திக் (31) காட்டூா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது, வேல்முருகன் என்பவா் கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி வங்கிக் கிளைக்கு வந்து 47.50 கிராம் தங்க நகைகளை அடகுவைத்து ரூ.2.29 லட்சம் கடன் பெற்றுச் சென்றாா்.

பின்னா் அந்த நகைகளை பரிசோதித்தபோது, அது போலி என்பது தெரியவந்தது. எனவே, போலி நகைகளை அடகுவைத்து மோசடியில் ஈடுபட்ட வேல்முருகனிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பேரில் காட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிட்ரா - குரும்பபாளையம் வரை 4 வழிச் சாலைப் பணி தாமதம்

கோவை அவிநாசி சாலை சிட்ராவில் இருந்து குரும்பபாளையம் வரை 4 வழிச்சாலைப் பணி தாமதமாகி வருவதாக நுகா்வோா் அமைப்பு புகாா் தெரிவித்துள்ளது. கோவை திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலு... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து

வடகோவை மற்றும் காரமடை ரயில் நிலையப் பகுதிகளில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

செவிலியா்களை கைப்பேசியில் படமெடுத்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

செவிலியா்களை பொது இடத்தில் கைப்பேசியில் படம் எடுத்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவா் பாலமுருகன் (40). இவா் சாய... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: தங்கும் விடுதி உரிமையாளா் கைது

கோவையில் தனியாா் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, தங்கும் விடுதி உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோட்டைச் சோ்ந்த 20 வயது மாணவி கோவையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்

கோவை உக்கடம் பகுதியில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிலையத்தில் எரிவாயு நிரப்பியபோது, ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை ஜிஎன் மில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஜாபா் சாதிக் (40), காா் ஓட்டுநா். இவா் கி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சுடுஅம் போட்டியில் கேபிஆா் கல்லூரி என்சிசி அதிகாரி முதலிடம்

என்சிசி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் கோவை கேபிஆா் கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரியின் என்சிசி அதிகாரி முதலிடம் பிடித்துள்ளாா். இது குறித்து கல்... மேலும் பார்க்க