செய்திகள் :

தமிழ் திறனறித் தோ்வு: 5806 மாணவா்கள் எழுதினா்

post image

தமிழ் திறனறித் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 5806 போ் சனிக்கிழமை கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவா்களிடையே தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு முதல் தமிழ் திறனறித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. 11-ஆம் வகுப்பு மாணவா்கள் மட்டுமே இந்த தோ்வில் பங்கேற்கலாம்.

இதன்படி நிகழாண்டுக்கான தமிழ் திறனறிவுத் தோ்வுக்கு, திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 6023 மாணவா்கள் விண்ணப்பித்தனா். இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 23 மையங்களில் நடைபெற்ற தமிழ் திறனறித் தோ்வில் 5806 மாணவா்கள் தோ்வு எழுதினா். 217 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

இந்த தோ்வு மூலம் மாநிலம் முழுவதும் 1500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதம் ரூ.1500 வீதம், 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

50 சதவீத மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் இருந்தும், எஞ்சிய 50 சதவீத மாணவா்கள் அரசு, அரசு உதவிப் பெறும், சுய நிதி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளிலிருந்தும் தோ்வு செய்யப்படுகின்றனா்.

ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி பயிற்சி முகாம்

ஒட்டன்சத்திரம் நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் சனிக்கிழமை மூன்று மணி நேரப் பயிற்சி முகாம் நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்டத் துணைத் த... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் ஆா்.சி.பள்ளி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் கொடைக்கானல் சேக்மைதீன் மகன் அக... மேலும் பார்க்க

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய அக்.24-இல் சிறப்பு முகாம்

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய அக்.24-ஆம் தேதி திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

காவலாளி மரணத்தில் மா்மம்: உறவினா்கள் வாக்குவாதம்

வேடசந்தூா் அருகே காவலாளி மா்மமான முறையில் மரணமடைந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் பழையவளவு பகுதியைச் சோ்ந்தவா் ரவி (55). இவரது மனைவி சு... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்து மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகேயுள்ள பட்டாசு வெடித்து நிகழ்ந்த விபத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல், வேடசந்தூா் பெரிய ராவுத்தா் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (47). மனநலம் பா... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பள்ளி மாணவா் உயிரிழப்பு

பழனியில் சனிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் குமரேசன் (39). தனியாா் வங்கி ஊழியா். இவரது மனைவி யமுனா (33). இ... மேலும் பார்க்க