செய்திகள் :

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

post image

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அங்கு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, கட்சி தொண்டர்கள் கூட மிக தூரத்தில் நிற்க வைக்கப்பட்டனர்.

வானதி சீனிவாசன்

திடீரென 2 நபர்கள் பாதுகாப்பு தடையை மீறி சாலையில் வேகமாக வந்தனர். திட்டமிட்டு நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்காக வந்தார்கள் என சந்தேகப்படுகிறோம். இந்தப் பிரச்னை தொடர்பாக காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

அந்தப் பகுதி என்பது இதற்கு முன்பாக சி.பி.ஆர் எம்பியாக இருந்த காலத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடம். கடந்த 2022-ம் ஆண்டு சங்கமேஸ்வரர் கோயில் முன்பாக கார் வெடிகுண்டு விபத்து நடைபெற்ற இடம். நாட்டின் மிகப்பெரிய தலைவர் வரும்போது, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பைக்கில் வந்த இளைஞர்கள்

உண்மையாகவே அவர்கள் மது போதையில் தான் வந்தார்களா அல்லது இதன் பின்னணியில் தீவிரவாத இயக்கம் உள்ளதா என்பதை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக அரசு என்பதால் தான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. குற்றவாளிகளின் பெயர்களை கூட காவல்துறை சொல்லவில்லை. அவர்கள் மீதி ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் எப்படி சாதாரணமாக வர முடியும். உண்மையை கண்டறிந்து மக்களுக்கு சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணன்

அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும்போது, எவ்வளவு தைரியம் இருந்தால் இவர்கள் போவார்கள். காவல்துறை இந்த விஷயத்தை ஏன் திசை திருப்புவது சந்தேகமளிக்கிறது. காவல்துறை உண்மையை வெளி கொண்டு வரவில்லை என்றால், மத்திய அரசின் உதவியை நாடி நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.

ரீல்ஸ் பார்த்து ஆபத்தை உணராமல் அணைகளில் குவிந்த மக்கள்! -துரித நடவடிக்கை எடுத்த புதுச்சேரி ஆட்சியர்

வடகிழக்கு பருவமழையால் புதுச்சேரியிலுள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதேபோல விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வீடூர் அணை அதன் மொத்தக் கொள்ளளவான 32 அடியை எட்டியதால், அதன் உபரி நீரை வெளியேற்றினர்... மேலும் பார்க்க

வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர்: விலகாத மர்மமும் விடை தெரியாத பல கேள்விகளும்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ’பைசன்’ படம் வெளியானதிலிருந்து சமூக ஊடகங்களில் அதிகம் ஒலிக்கும் பெயராகி இருக்கிறது ’வெங்கடேச பண்ணையார்’.தென் மாவட்டமான தூத்துக்குடி பகுதியில் நடக்கும் ஒரு குழு மோதல்களுக்கிட... மேலும் பார்க்க

உலக நாடுகள் மீது ட்ரம்ப் போட்ட வரிகள்; அள்ளி தந்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வரிகளை விதித்து தள்ளியிருக்கிறார். இந்த வரிகள் அமெரிக்காவிற்கு அதிக பணத்தைக் கொண்டு வரும். இதனால், அமெரிக்காவின் கடன்களை வெகுவாக குறைக்கலாம். அமெரிக்க மக்களு... மேலும் பார்க்க

SIR Explained in Tamil : நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

தமிழ்நாட்டில் SIR எப்படி நடத்தப்படுகிறது? இந்த செயல்முறையில் வாக்காளர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஏன் இதைச் சுற்றி பல விமர்சனங்கள் எழுந்துள்ளன? இந்த வீடியோவில், SIR எப்படி செயல்படுகிறது, யார் நடத்துகி... மேலும் பார்க்க

பீகார்: ``வாக்குகளுக்காக மோடி நடனம் கூட ஆடுவார்'' - ராகுல் காந்தி பேச்சு; பாஜக கடும் எதிர்ப்பு

பீகாரின் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, இந்தியா கூட்டணியும் தேசிய முற்போக்கு கூட்டணியும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பிரசாரத்தில் இரு கூட்டணிகளும் ... மேலும் பார்க்க

முதல்முறையாக சந்தித்துகொள்ளும் ட்ரம்ப், ஜின்பிங்: ஏன் இது முக்கியம்? இருவரின் எதிர்பார்ப்புகள் என்ன?

தென் கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு தற்போது நடந்து வருகிறது. தான் முதல்முறையாக அமெரிக்க அதிபராக இருந்தபோது ஜின்பிங்கை சந்தித்த ட்ரம்ப், இப்போது தான் மீண்டும் ... மேலும் பார்க்க