செய்திகள் :

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

post image

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. இதற்காக அங்கு போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு, கட்சி தொண்டர்கள் கூட மிக தூரத்தில் நிற்க வைக்கப்பட்டனர்.

வானதி சீனிவாசன்

திடீரென 2 நபர்கள் பாதுகாப்பு தடையை மீறி சாலையில் வேகமாக வந்தனர். திட்டமிட்டு நிகழ்ச்சியை சீர்குலைப்பதற்காக வந்தார்கள் என சந்தேகப்படுகிறோம். இந்தப் பிரச்னை தொடர்பாக காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

அந்தப் பகுதி என்பது இதற்கு முன்பாக சி.பி.ஆர் எம்பியாக இருந்த காலத்தில் குண்டு வெடிப்பு நடந்த இடம். கடந்த 2022-ம் ஆண்டு சங்கமேஸ்வரர் கோயில் முன்பாக கார் வெடிகுண்டு விபத்து நடைபெற்ற இடம். நாட்டின் மிகப்பெரிய தலைவர் வரும்போது, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

பைக்கில் வந்த இளைஞர்கள்

உண்மையாகவே அவர்கள் மது போதையில் தான் வந்தார்களா அல்லது இதன் பின்னணியில் தீவிரவாத இயக்கம் உள்ளதா என்பதை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக அரசு என்பதால் தான் எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. குற்றவாளிகளின் பெயர்களை கூட காவல்துறை சொல்லவில்லை. அவர்கள் மீதி ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் எப்படி சாதாரணமாக வர முடியும். உண்மையை கண்டறிந்து மக்களுக்கு சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணன்

அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும்போது, எவ்வளவு தைரியம் இருந்தால் இவர்கள் போவார்கள். காவல்துறை இந்த விஷயத்தை ஏன் திசை திருப்புவது சந்தேகமளிக்கிறது. காவல்துறை உண்மையை வெளி கொண்டு வரவில்லை என்றால், மத்திய அரசின் உதவியை நாடி நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க