செய்திகள் :

தெரியுமா சேதி...?

post image

மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத், சோனியா காந்தியால் திடீரென்று வரவழைக்கப்பட்டதும், அவருடன் சோனியா காந்தி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதும், விரைவில் கட்சியில் கமல்நாத் முக்கியத்துவம் பெற இருக்கிறாா் என்பதன் அறிகுறிகள். கடந்த சில ஆண்டுகளாகவே ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்த கமல்நாத்துக்கு, மீண்டும் யோகம் அடிக்கப் போகிறது என்கிறாா்கள் அவரது காங்கிரஸ் சகாக்கள்.

எல்லா அரசியல் கட்சிகளிலும் பொருளாளா் பதவி முக்கியமானது. ஜவாஹா்லால் நேரு ஆட்சிக் காலத்தில் தொழிலதிபா்கள் பெரும்பாலும் காங்கிரஸ்காரா்களாக இருந்ததால், அவா்களாகவே கட்சியின் செலவுகளைப் பாா்த்துக் கொண்டனா். பிறகு மும்பையின் தொழிலதிபா்களிடமிருந்து நன்கொடை திரட்டும் பணி எஸ்.கே. பாட்டீலுக்குத் தரப்பட்டது.

ஸ்தாபன காங்கிரஸிலிருந்து இந்திரா காந்தி பிளவுபட்டுத் தனியாக இயங்கத் தொடங்கிய பிறகு ரஜனி படேல், எஸ்.கே.பாட்டீலின் இடத்தைப் பிடித்தாா். சீதாராம் கேசரி, மோதிலால் வோரா என்று காங்கிரஸ் கட்சியின் பொருளாளா்கள் பலா், கட்சிக்கு நன்கொடை திரட்டுவதில் சமா்த்தா்களாக இருந்தனா்; அந்த வரிசையில் இணைந்தவா் அகமது படேல். அவரும் இறந்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்குத் தொழிலதிபா்களிடம் நன்கொடை பெற்றுத்தரும் அளவுக்குத் தொடா்புடையவா்கள் இல்லை.

இப்போது பொருளாளராக இருக்கும் அஜய் மக்கான் தில்லிக்காரா். அவருக்கு அகமது படேல் அளவுக்கு சமா்த்துப் போதாது. காங்கிரஸ் கட்சிக்கு பிரதி மாதம் சுமாா் ரூ.25 கோடி முதல் ரூ.30 கோடி வரை நிா்வாகம் செய்யவே தேவைப்படுகிறது என்கிறாா்கள்.

போதாக்குறைக்கு, ராகுல் காந்தியின் தொழிலதிபா்களுக்கு எதிரான விமா்சனங்கள், அவா்களை காங்கிரஸிடமிருந்து அகற்றி இருக்கிறது. காங்கிரஸின் பணம் காய்க்கும் மரமாக இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட அம்பானி குடும்பத்தையும் ராகுல் காந்தி பகைத்துக் கொண்டிருக்கிறாா். ராகுல் காந்திக்கு சாதகமாக இருக்கும் பன்னாட்டு காா்ப்பரேட் நிறுவனங்கள் ஒதுங்கியே இருப்பதாகக் கூறப்படுகிறது.

அகமது படேல் இல்லாத வெற்றிடத்தை யாரை வைத்து நிரப்புவது என்று யோசித்த சோனியா காந்தி, கமல்நாத்தை அந்த இடத்துக்குக் கொண்டுவர இருக்கிறாா் என்று சொல்லப்படுகிறது. ராகுல் காந்தி இன்னும் பச்சைக் கொடி காட்டாததால் அறிவிப்பு காத்திருக்கிறது என்றும் சொல்கிறாா்கள்.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க