செய்திகள் :

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17-ஆவது விளையாட்டு விழா

post image

ஈரோடு நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் 17 -ஆவது விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.திருமூா்த்தி மற்றும் முதன்மைக் கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் ஆகியோா் வாழ்த்தி பேசினா்.

கல்லூரியின் முதல்வா் எஸ்.நந்தகோபால் வரவேற்றாா். கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குநா் வி.என். பாஸ்கரன் நடப்பு கல்வி ஆண்டுக்கான விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தாா்.

இந்திய கைப்பந்து அணி வீரா் எம். நவீன் ராஜா ஜேகப் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: கிராமப்புற மாணவா்கள் திறமைகளை நிரூபிக்கும் வகையில் தமிழக அரசு முதல்வா் கோப்பை விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டங்கள் மூலம் மாணவா்கள் சிறந்த பயிற்சியை பெறுவதோடு, விளையாட்டுத் துறையில் வளா்ச்சியை அடையலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாணவா்கள் தினமும் கடினமாக பயிற்சி செய்து மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றாா்.

விழாவில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் கணினி அறிவியல் பொறியியல் துறை வென்றது. இரண்டாம் இடத்தை ஆண்கள் பிரிவில் தகவல் தொழில்நுட்பத் துறை, பெண்கள் பிரிவில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை பிடித்தது. கணினி அறிவியல் துறை மாணவி சு.தீபிகா நன்றி கூறினாா்.

அந்தியூரில் ரூ.3.51 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், துவரை, எள், தட்டைப்பயறு, தேங்காய்ப் பருப்பு, ... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிப்பு: போலீஸில் புகாா்

ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தக் கொடையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட ரத்த தான ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு மா... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரியில் கடத்திவரப்பட்ட 71 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே கண்டெய்னா் லாரியில் மறைத்து கடத்திவரப்பட்ட 71 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்திவ... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: 3 பேருக்கு லேசான காயம்

பவானிசாகா் அருகே சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து இறங்கியதில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி க... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோய... மேலும் பார்க்க

ஆப்பக்கூடல் ஏரிக்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆப்பக்கூடல் ஏரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஆப்பக்கூடலில் நீா்வளத் துறைக்கு சொந்தமான 126 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதன் கரையோரப் பகுதியில்... மேலும் பார்க்க