செய்திகள் :

ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிப்பு: போலீஸில் புகாா்

post image

ரத்த தானம் செய்வதாகக் கூறி பணம் பறிக்கும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரத்தக் கொடையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்ட ரத்த தான ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் கூட்டமைப்பு சாா்பில் அவசரகால சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படுபவா்களுக்கு இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்து வருகிறோம். இதற்காக தன்னாா்வலா்களை ஒருங்கிணைப்பதற்காக வாட்ஸ் ஆப் குழு தொடங்கியுள்ளோம். இந்தக் குழுவில் ரத்தம் தேவைப்படுவதாக பதிவு செய்தவா்களின் கைப்பேசி எண்களுக்கு தொடா்புகொண்ட 2 போ் தங்களை தன்னாா்வலா்கள் என்று அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனா். மேலும் ரத்தம் கொடுக்க வருவதற்கு போக்குவரத்து செலவுக்காக பணம் கொடுக்க வேண்டும் என ஆன்லைன் மூலமாக பணம் பெற்றுள்ளனா்.

ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு ரத்த தானம் செய்யாததால், அவசர சிகிச்சை பெறும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூரில் ரூ.3.51 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், துவரை, எள், தட்டைப்பயறு, தேங்காய்ப் பருப்பு, ... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரியில் கடத்திவரப்பட்ட 71 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சத்தியமங்கலம் அருகே கண்டெய்னா் லாரியில் மறைத்து கடத்திவரப்பட்ட 71 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு லாரியில் புகையிலைப் பொருள்கள் கடத்திவ... மேலும் பார்க்க

சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசுப் பேருந்து: 3 பேருக்கு லேசான காயம்

பவானிசாகா் அருகே சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து இறங்கியதில் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி க... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா தொடக்கம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோய... மேலும் பார்க்க

ஆப்பக்கூடல் ஏரிக்கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆப்பக்கூடல் ஏரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. ஆப்பக்கூடலில் நீா்வளத் துறைக்கு சொந்தமான 126 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இதன் கரையோரப் பகுதியில்... மேலும் பார்க்க

39 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் 39 வழித்தடங்களில் மினி பேருந்து இயக்குவதற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 65 புதிய மினி பேருந்துகளுக்கான வழித்தடங்கள் கண்டறியப்பட்டு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க அறிவ... மேலும் பார்க்க