செய்திகள் :

கவுன்சிலரிடையே மோதல்; மேசையை தூக்கிவீசி அமளிதுமளி- களேபரமான சிவகாசி மாமன்ற கூட்டம்!

post image

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தீர்மானம் குறித்து விவாதம் தொடங்கியபோது, பா.ஜ.க. உறுப்பினர் குமரிபாஸ்கர், மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து தேசிய கீதம் அவமரியாதை செய்யப்படுகிறது அதற்கு, மேயர் விளக்கம் அளிக்க வேண்டும் என கையில் பதாகை ஏந்தி கேள்வி எழுப்பினார். உறுப்பினரின் இந்த கேள்விக்கு, அவருக்கு அருகில் இருந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர், 'அதெல்லாம் விளக்கம் கொடுத்தாச்சு' என கூறியதாக கூறப்படுகிறது.

பாஜக கவுன்சிலர்

மாமன்ற உறுப்பினர் ரவிசங்கரின் பேச்சால் ஆத்திரமடைந்த குமரிபாஸ்கர், "நான் உங்களிடம் கேள்வி கேட்கவில்லை, மேயரிடம் கேள்வி கேட்டேன்" என காட்டமாக கூறினார். இதனால், மாமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில், பா.ஜ.க. உறுப்பினர் குமரி பாஸ்கர் கையில் இருந்த பதாகையை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிடுங்கி எறிந்தார்.

இதனால் வாக்குவாதம் கடந்து உறுப்பினர்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து கவுன்சிலர் கூட்டம் பரபரப்பானது. மோதல் போக்கு கைமீறி போவதை தடுக்கும் நோக்கில் சக கவுன்சிலர்கள் இருவரையும் தடுத்தனர். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் உறுப்பினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

விவாதம்

இதன்பின்னர், மன்ற பொருளின் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. அப்போது, தி.மு.க. உறுப்பினர் ஸ்ரீனிகா மேயரிடம் கேள்வி எழுப்பியதற்கு, அவருக்கு அருகே இருந்த மற்றொரு தி.மு.க. உறுப்பினர் ஜெயினுலாபுதீன் பதில் அளித்தார். இதற்கு பதில் பேசிய ஸ்ரீனிகா, 'நான் மேயரிடம் கேள்வி கேட்கிறேன். உங்களிடம் கேட்கவில்லை' என கோபமாக கூறினார். இதனால், தி.மு.க. கவுன்சிலர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கவுன்சிலர்கள் கூட்டம் மீண்டும் பரபரப்பான நிலையில் மற்ற கவுன்சிலர்கள் அனைவரும் கூட்டாக, "மாமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கான பதில்களை மேயர் அல்லது ஆணையாளர் மட்டும் அளிக்க வேண்டும், மற்றவர்கள் பதில் அளிக்க வேண்டாம்" என்று கூறினர். இதனால், கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதில் தி.மு.க. கவுன்சிலர் ஜெயினுலாபுதீன், மேஜையை கீழே தள்ளி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திமுக கவுன்சிலர்கள்

இதனால், அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் உள்ளே வந்த போலீஸார், மாமன்ற உறுப்பினரிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது. மாமன்ற கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த பா.ஜ.க. கவுன்சிலர் குமரி பாஸ்கரை, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சூழ்ந்து, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மன்றக் கூட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி அரங்குக்கு வெளியேவும் கவுன்சிலர்கள் மோதல் போக்குடன் நடந்து கொண்டனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு கவுன்சிலர்களை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தாலீ, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Health: வைட்டமின்- டி குறைபாடு இருப்பவர்கள் மீள்வது எப்படி?

நமது உடலில் எலும்புகளின் கட்டுமானம் சரியாக இருந்தால்தான் நாம் நிற்க, நடக்க, ஓட என எந்த வேலையையும் செய்ய முடியும். எலும்புகளின் கட்டுமானம் சரியில்லை என்றால் நம்மால் எழுந்திருக்கக்கூட முடியாது. எலும்பின... மேலும் பார்க்க

ஊட்டி கோடை விழா: பழ கண்காட்சி முதல் மலர் கண்காட்சி வரை! எந்தெந்த தேதிகளில் என்னனென்ன நிகழ்ச்சிகள்?

உலக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வரும் கோடை வாசஸ்தலமான நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கான கோடை விழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கண்காட்சி நடைபெறும் பூங்காக்கள் அனைத்தையும் புதுப்பொலிவு... மேலும் பார்க்க

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்; 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு... காற்றில் பறந்த போர் நிறுத்தம்!

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி, காசா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த... அன்று தொடங்கியது இஸ்ரேல் - காசா போர். பொதுவாக, இஸ்ரேல் தான் தாக்குதலை தொடங்கும். ஆனால், இந்தத் தடவை, வழக்கத்திற்கு மா... மேலும் பார்க்க

``திமுகவுடன் கள்ளக் கூட்டணி'' - நேருக்கு நேராக முட்டிக்கொள்ளும் தவெக vs பாஜக! - என்ன நடக்கிறது?

டாஸ்மாக் விவகாரம் - தவெக குற்றச்சாட்டுதமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியதை அடுத்து, டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டத்தை அறிவித்து ... மேலும் பார்க்க

ஔவையார்... ஔவை யார்?! - தமிழக சட்டப்பேரவையில் நடந்த சுவாரஸ்ய விவாதம்!

இன்று நடந்து வரும் தமிழ்நாடு சட்டப்பேரவையில், ஔவையார் குறித்த சுவாராஸ்ய உரையாடல் சட்டமன்ற உறுப்பினர் ஒ.எஸ் மணியன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, சுவாமிநாதன், சபாநாயகர் அப்பாவுக்கு இடையில் ... மேலும் பார்க்க