செய்திகள் :

நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்பட சட்டம்: காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தல்

post image

நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தினாா்.

கடந்த ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா்.

இதைத்தொடா்ந்து கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில், அவா்களைப் பற்றிய தகவல்களை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மத்திய அரசுடன் பகிா்வதாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவும், அந்நாட்டின் ஆா்சிஎம்பி காவல் படையினரும் அண்மையில் குற்றஞ்சாட்டினா்.

இதேபோல கடந்த ஆண்டு அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும், இதில் ‘ரா’ உளவு அமைப்பைச் சோ்ந்த முன்னாள் அதிகாரி விகாஸ் யாதவுக்கு தொடா்புள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டினா்.

இந்த சம்பவங்கள் காரணமாக நாடாளுமன்ற மேற்பாா்வையில் உளவு அமைப்புகள் செயல்படும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக 2011, 2021 மற்றும் நிகழாண்டில் நாடாளுமன்றத்தில் தான் தாக்கல் செய்த தனிநபா் மசோதா ஏற்கப்பட்டிருந்தால், சா்வதேச அளவில் தற்போது இந்தியாவுக்கு நோ்ந்துள்ள சங்கடமான நிலை ஏற்பட்டிருக்காது என்று அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

நிகழாண்டு அவா் தாக்கல் செய்த தனிநபா் மசோதாவில், ‘உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இந்திய உளவு அமைப்புகள் செயல்படும் விதம், தமது அதிகாரங்களை அந்த அமைப்புகள் பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை ஒழுங்குப்படுத்த வேண்டும். அந்த அமைப்புகளை நாடாளுமன்றம் மேற்பாா்வையிட தேசிய உளவு மற்றும் பாதுகாப்பு மேற்பாா்வை குழுவை அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

பிரதமர் மோடிக்கு ரூ.100 அனுப்பிய பழங்குடிப் பெண்! ஏன் தெரியுமா?

ஒடிஸாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு ரூ.100 அனுப்பி வைத்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாநில பாஜக துணைத் தலைவரிடம் அவர் ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் களம் சூ... மேலும் பார்க்க

நினைவேந்தல் நிகழ்வில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு!

அஸ்ஸாம் மாநிலத்தில் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றில் உணவு உண்ட 200 பேருக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் பிரதீவ்ப் கோகய் என்பவரின் தாயாருக்கு நினைவேந்தல் நடைபெற்றுள... மேலும் பார்க்க

இந்தூருக்கு விரைவில் முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் டபுள் டெக்கர் பேருந்து சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதன் மேயர் புஷ்யமித்ர பார்கவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். 60 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்... மேலும் பார்க்க

சல்மான் கான் என்ன செய்தார்? கொலை மிரட்டல் ஏன்? விரிவாக!!

பாலிவுட்டில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம்வரும் சல்மான் கான் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை முயற்சியில் இருந்து காப்பதற்கு பல்வேறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சல்மான் கானும் காவல்துறையின... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலி

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்தில் ஆட்டோ மீது பேருந்து மோதியதில் 12 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், தௌல்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு பேருந்து சனிக்கிழமை இரவு 11 மணியள... மேலும் பார்க்க