செய்திகள் :

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது கவாஸகி!

post image

நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் கவாஸகி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரேஸ் வாகனங்களுக்கு புகழ்பெற்ற கவாஸகி நிறுவனம் நிஞ்சா 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.7.27 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல் பைக்கைவிட ரூ.11,000 அதிகமாகும்.

அதே மாடலில் இருந்தாலும், இந்த வகையில் நிறம் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் இன்ஜின் 649cc கொண்டதாகவும், இரட்டை லிக்விட் கூல்ட் இன்ஜின், 67 குதிரைத்திறன் கொண்டதாகவும், ஒரு நிமிடத்திற்கு 6700 முறை சக்கரம் சுழலும் வகையில் 64nm முடுக்குவிசைத் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 வரையிலான கியர் பாக்ஸும் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 41 மில்லிமீட்டர் டெலஸ்கோபிக் போர்க்ஸும், பின்புறத்தில் அட்ஜஸ்ட் செய்யக் கூடிய சஸ்பென்ஸன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் 196 கிலோ கிராம் எடையுடன் 15 லிட்டர் பெட்ரோல் டேங்கும் உள்ளது. இதில், மற்றொரு சிறப்பம்சமாக 4.3 அங்குல டிஎஃப்டி திரை அமைக்கப்பட்டுள்ளது.

இது டிரையம்ப் டேட்டோனா 660 பைக்கிற்கு போட்டியாகக் களமிறக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது நிஞ்சா பைக்கின் விலை குறைவுதான். டிரையம்ப் டேட்டோனா 660 ரூ.9.72 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க: ஓப்போவுக்கு போட்டியாக விவோ அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்!

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் விவகாரம்: முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது. அதே வேளையில் இந... மேலும் பார்க்க

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் விவகாரம்: ‘ராகுலின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம்’

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்ாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவறான தகவல் தெரிவிப்பது, சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலம்- ஜே.டி.வான்ஸ்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிா்காலத்தை தீா்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா். மேலும், ‘வரி சாரா கட்டுப்பாடுகளைக் கைவிட... மேலும் பார்க்க

சா்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அழைப்பு

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சாா்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சா்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தாா். அமெரிக்காவுக்க... மேலும் பார்க்க

பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவா் தேவை- லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு

பிகாருக்கு தொலைநோக்குப் பாா்வையுள்ள ஆற்றல்மிக்க தலைவா் தேவை. மாநிலத்தில் ‘முக்கியப் பொறுப்பை’ ஏற்க எங்கள் கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் தயாராக உள்ளாா் என்று லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி கூறியுள்ள... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது: குடியரசு துணைத் தலைவா்

நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அரசமைப்புச் சட்ட பதவி வகிப்... மேலும் பார்க்க