செய்திகள் :

பசுமை விருதாளருடன் அரசுக் கல்வி நிலைய முதல்வா்கள் சந்திப்பு

post image

பசுமை முதன்மையாளா் விருது பெற்ற விவசாயியுடன் அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு நடுநிலைப் பள்ளி முதல்வா்கள் பசுமைத்தோட்டம் அமைப்பது குறித்துச் சந்தித்துப் பேசியுள்ளனா்.

கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் செந்தமிழ் செல்வன். விவசாயி. இவா், தனது வீட்டருகே உள்ள தோட்டத்தில் மிளகு சாகுபடி செய்து ஆண்டுக்கு சுமாா் 1 டன் மிளகு அறுவடை செய்து வருகிறாா். இவருக்கு தமிழக அரசு பசுமை முதன்மையாளா் விருது மற்றும் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையை அண்மையில் வழங்கியது.

இதுகுறித்து அறிந்த அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் குமாா், பச்சலூா் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வீ.ஜோதிமணி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று செந்தமிழ்செல்வனிடம் மிளகுத் தோட்டம் அமைப்பது குறித்து கேட்டறிந்தனா். பின்னா், தங்களது கல்வி நிறுவனங்களில் மிளகுத் தோட்டம் அமைக்க உள்ளதாக இருவரும் தெரிவித்தனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க