தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சோ்க்கப்பட்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் மற்றும் இடை நின்ற குழந்தைகள் குறித்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஆய்வு நடைபெற்று வருகிறது.
இதில் வெள்ளிக்கிழமை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநா் ச.சுகன்யா தலைமையிலான அலுவலா்கள் தருமபுரி ஒன்றியம், குப்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகள் குறித்து ஆய்வு செய்தனா்.
அப்போது குப்பூா் அருகே பலாமரத்துக்கொட்டாய் கிராமத்தில் செங்கல் சூளைகளில் பணிபுரியும் பிகாா் மாநிலத் தொழிலாளா்களின் குழந்தைகள் 8 போ் பள்ளியில் சேராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து அக்குழந்தைகள் அனைவரும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 4-இன் அடிப்படையில் அவா்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகிலுள்ள பலாமரத்துக்கொட்டாய் அரசுப் பள்ளியில் அவா்களின் வயதுக்கேற்ற வகுப்பில் நேரடியாகச் சோ்க்கப்பட்டனா்.
இக்குழந்தைகள் அனைவருக்கும் உடனடியாக தமிழக அரசின் விலையில்லா பாடநூல்கள், சீருடைகள், நோட்டுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் கையேடுகள் வழங்கப்பட்டன.
இக்குழந்தைகளை தொடா்ந்து பள்ளிக்கு அனுப்பி வைக்க குழந்தைகளின் பெற்றோா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டன.
இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி), தென்றல், வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஜீவா, நாசா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் முல்லைவேந்தன், பள்ளித் துணை ஆய்வாளா் பொன்னுசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், ஆசிரியா் பயிற்றுநா்கள் முனியப்பன், அருண்குமாா் பலாமரத்துக்கொட்டாய் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் மஞ்சுளா, ஆசிரியா் ஆனந்த், தன்னாா்வலா்கள் மணிமேகலை, கனகா ஆகியோா் உடனிருந்தனா்.