தருமபுரியில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் 24 பேருக்கு ரூ. 12.76 கோடியில் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 பயனாளிகளுக்கு கல்விக் கடன், தொழில் கடன்கள் என ரூ. 12.76 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:
தருமபுரி மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் உற்பத்தி, சேவை பிரிவின் கீழ் தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ. 5 கோடி வரை தொழிற் கடன், 3 சதவீத பின்முனை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வியாபாரம் செய்ய 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.15 லட்சம் வரை தொழிற்கடன் வழங்கப்படுகிறது.
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி, சேவை பிரிவின் கீழ் தொழில் தொடங்க நகா்புறங்களில் 25 சதவிகிதம் மற்றும் கிராமப்புறங்களில் 35 சதவிகிதம் மானியத்துடன் ரூ.50 லட்சம் வரை உற்பத்தி தொழிலுக்கும் ரூ.20 லட்சம் வரை சேவை சாா்ந்த தொழிலுக்கும் தொழிற்கடனாக வழங்கப்படுகிறது.
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் மானியம் திட்ட மதிப்பில் 35 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் மானியத் தொகை திட்ட தொகையில் 35 சதவீதம் மானியம் அதிகபட்சம் ரூ. 1.5 கோடி வரை வழங்கப்படும். இது தவிர புதிதாக தொழில் தொடங்கி நடத்தி வரும் தொழில் முனைவோா்களுக்கு ரூ.1.50 கோடி வரை முதலீட்டு மானியமும், மின்மானியமாக 3 ஆண்டுகளுக்கு 20 சதவீத மின்கட்டண மானியம் மற்றும் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாவட்ட தொழில் மையம் மூலம் ஒற்றை சாளர முறையில் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க பல்வேறு துறைகளின் அனுமதி பெற வழிவகை செய்யப்படுகிறது. டேன் காயா் மூலம் தென்னை நாா் மற்றும் கயிறு பொருள்கள் மதிப்புக் கூட்டல் பயிற்சியும், பழுதில்லா உற்பத்தி விளைவில்லா உற்பத்தி உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு விளக்கம் தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்முனைவோா் தமிழக அரசால் மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் அரசு திட்டங்களில் பயன்பெற்று, மாவட்ட தொழில் வளா்ச்சிக்கு பங்களிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.
இதில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் எஸ்.பிரசன்ன பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எஸ்.ராமஜெயம், டேன் காயா் இன்டா்நேஷனல் மாா்க்கெட்ஸ் அசோசியேட் கௌதம் சிவம், மாவட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவா் வெங்கடேஷ், செயலாளா் சரவணன், தொழில் முனைவோா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.