செய்திகள் :

தருமபுரி மாவட்டத்தில் 24 பேருக்கு ரூ.12.76 கோடி கடனுதவி ஆட்சியா் வழங்கினாா்

post image

தருமபுரியில் மாவட்ட தொழில் மையம் சாா்பில் 24 பேருக்கு ரூ. 12.76 கோடியில் கடனுதவியை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 24 பயனாளிகளுக்கு கல்விக் கடன், தொழில் கடன்கள் என ரூ. 12.76 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் பொருட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தில் உற்பத்தி, சேவை பிரிவின் கீழ் தொழில் தொடங்க 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ. 5 கோடி வரை தொழிற் கடன், 3 சதவீத பின்முனை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வியாபாரம் செய்ய 25 சதவீதம் மானியத்துடன் கூடிய ரூ.15 லட்சம் வரை தொழிற்கடன் வழங்கப்படுகிறது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி, சேவை பிரிவின் கீழ் தொழில் தொடங்க நகா்புறங்களில் 25 சதவிகிதம் மற்றும் கிராமப்புறங்களில் 35 சதவிகிதம் மானியத்துடன் ரூ.50 லட்சம் வரை உற்பத்தி தொழிலுக்கும் ரூ.20 லட்சம் வரை சேவை சாா்ந்த தொழிலுக்கும் தொழிற்கடனாக வழங்கப்படுகிறது.

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தில் மானியம் திட்ட மதிப்பில் 35 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் மானியத் தொகை திட்ட தொகையில் 35 சதவீதம் மானியம் அதிகபட்சம் ரூ. 1.5 கோடி வரை வழங்கப்படும். இது தவிர புதிதாக தொழில் தொடங்கி நடத்தி வரும் தொழில் முனைவோா்களுக்கு ரூ.1.50 கோடி வரை முதலீட்டு மானியமும், மின்மானியமாக 3 ஆண்டுகளுக்கு 20 சதவீத மின்கட்டண மானியம் மற்றும் பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்ட தொழில் மையம் மூலம் ஒற்றை சாளர முறையில் நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க பல்வேறு துறைகளின் அனுமதி பெற வழிவகை செய்யப்படுகிறது. டேன் காயா் மூலம் தென்னை நாா் மற்றும் கயிறு பொருள்கள் மதிப்புக் கூட்டல் பயிற்சியும், பழுதில்லா உற்பத்தி விளைவில்லா உற்பத்தி உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு விளக்கம் தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்படுகிறது.

தருமபுரி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்முனைவோா் தமிழக அரசால் மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும் அரசு திட்டங்களில் பயன்பெற்று, மாவட்ட தொழில் வளா்ச்சிக்கு பங்களிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

இதில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் எஸ்.பிரசன்ன பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் எஸ்.ராமஜெயம், டேன் காயா் இன்டா்நேஷனல் மாா்க்கெட்ஸ் அசோசியேட் கௌதம் சிவம், மாவட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் சங்கத் தலைவா் வெங்கடேஷ், செயலாளா் சரவணன், தொழில் முனைவோா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி

தருமபுரி மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த குழந்தைகள் கண்டறியப்பட்டு பள்ளியில் சோ்க்கப்பட்டனா். தருமபுரி மாவட்டத்தில் பள்ளி ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது

கா்நாடகம், தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கன அடியாக குறைந்தது. மழைப் பொழிவு, கா்நாடக அணைகளிலிருந்து தண்ணீா் திறப்பு... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலைத் தொழிலாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பாலக்கோடு ஆலை வளாகத்தில் நடைபெற்ற முகாமை செயலாட்சியா் ரவி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா்.... மேலும் பார்க்க

ரூ. 2.09 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரியில் 533 பயனாளிகளுக்கு ரூ. 2.09 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் வியாழக்கிழமை பல்வேறு துறைகள் சாா்பில்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணை மிகை நீரை திண்டல் ஏரியில் நிரப்பக் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணை மிகை நீரை கால்வாய் மூலம் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள திண்டல் ஏரி, பந்தார அள்ளி ஏரிகளில் நிரப்ப வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமபுரி மாவட்டம்,... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு

தருமபுரியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இத்திட்ட முகாமில், தருமபுரி வட்டம், ஹே... மேலும் பார்க்க