செய்திகள் :

பாரத் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடக்கம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

மத்திய அரசின் ‘பாரத்’ திட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

பயறு மற்றும் பருப்பு வகைகளின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்), தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (என்ஏஎஃப்இடி), கேந்திரிய பண்டாா் ஆகியவை வாயிலாக ‘பாரத்’ வணிகப் பெயரில் கொண்டைக் கடலை கிலோ ரூ.58-க்கும், மசூா் பருப்பு கிலோ ரூ.89-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2023, அக்டோபா் மாதம் தொடங்கப்பட்ட ‘பாரத்’ திட்டத்தின் முதல்கட்டத்தின்கீழ் அரிசி, கோதுமை மாவு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, பாசிப் பயறு ஆகியவை மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது கோதுமை மாவு கிலோ ரூ.30 (தொடக்க விலை ரூ.27.50), அரிசி கிலோ ரூ.34 (தொடக்க விலை ரூ.29), கடலைப் பருப்பு கிலோ ரூ.70-க்கு (தொடக்க விலை ரூ.60) விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பருப்பு, பாசிப் பயறு முறையே கிலோ ரூ.107, ரூ.93-க்கு விற்கப்படுகிறது.

இந்நிலையில், ‘பாரத்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி இரண்டாம் கட்ட திட்டத்தை தொடங்கிவைத்தாா்.

அப்போது பேசிய அவா், ‘கூட்டுறவு விற்பனையகங்கள் மூலம் ‘பாரத்’ கொண்டைக் கடலை கிலோ ரூ.58-க்கும், மசூா் பருப்பு கிலோ ரூ.89-க்கும் விற்கப்படும். இத்திட்டத்துக்காக கூட்டுறவு சங்கங்களுக்கு 3 லட்சம் டன் கொண்டைக் கடலை ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

என்சிசிஎஃப் நிா்வாக இயக்குநா் அனிஸ் சந்திர ஜோசப் கூறுகையில், ‘பாரத் கொண்டைக் கடலை மற்றும் மசூா் பருப்பு விற்பனை, முதல்கட்டமாக தில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரத்தில் தொடங்கப்படும். அடுத்த 10 நாள்களுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்’ என்றாா்.

மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இணையமைச்சா்கள் பி.எல்.வா்மா, நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

பிகாரில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்பு

முஸாபா்பூா் : பிகாரின் முஸாபா்பூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞா் உயிரிழந்தாா். கடந்த வாரம் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களைச் சோ்ந்த 37 போ் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

சாம் பித்ரோடா என்கிற பெயரைக் கேள்விப்படாதவா்கள் இருக்க முடியாது. இந்தியாவின் தொலைத்தொடா்புத் துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் அவா்தான். சாம் பித்ரோடாவின் ஆலோசனையின்பேரில் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி எ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

நமது சிறப்பு நிருபா் 2019-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, பழங்குடியினா் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் முன... மேலும் பார்க்க

டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா். வடக்கு... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி வில... மேலும் பார்க்க

மீனவா்கள் கைது விவகாரம்: இந்தியா-இலங்கை அக். 29-இல் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம்

இரு நாடுகளின் மீனவா் பிரச்னை தொடா்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இலங்கை தலைநகா் கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்தி... மேலும் பார்க்க