செய்திகள் :

பிக் பாஸ் - 8: இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்!

post image

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதம் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் - பெண்கள் என இரு அணிகளாக போட்டி நடைபெற்று வருகிறது.

சென்ற வாரம் நடைபெற்ற எவிக்சனில், குறைந்த வாக்குகள் பெற்றதன் மூலம் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார்.

இதையும் படிக்க: அண்ணா என்றழைத்த சாய் பல்லவி..! கடுப்பான சிவகார்த்திகேயன்!

தற்போது, பிக் பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரம் வெளியேறப்போகும் நபர்களின் பட்டியலில் (நாமினேஷன்) மொத்தம் 10 பேர் இடம்பெற்று இருந்தனர்.

இந்தப் பட்டியலில் விஜே விஷால், தர்ஷா குப்தா, செளந்தர்யா, ரஞ்சித், கானா ஜெஃப்ரி, முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், அர்ணவ், சாச்சனா ஆகிய 10 போட்டியாளர்கள் இருந்தனர்.

மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், குறைவான வாக்குகளைப் பெற்று நடிகர் அர்ணவ் வெளியேற்றப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வத் தகவல் இன்றிரவு ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரியவரும்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக நடிகர் அர்ணவ் மனைவி திவ்யா செல்லவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவிவந்த நிலையில், அர்ணவ் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்?: அன்புமணி ராமதாஸ்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனப் பணிகளை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? இது தான் கல்வி வளர்ச்சியில் காட்டும் அக்கறையா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பத்த... மேலும் பார்க்க

விஸ்தாராவின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

விஸ்தாரா ஏா் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் விஸ்தாரா ஏர் நிறுவனத்தின் 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரு... மேலும் பார்க்க

இன்று 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று(அக். 20) 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:வடதமிழக... மேலும் பார்க்க

துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி!

மேட்டூர் அருகே ஏரியில் துணி துவைக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவலிங்கம், இவருடைய மகள் சிவருந்தினி (ரேவதி) (... மேலும் பார்க்க

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

காவலர் நீத்தார் நினைவு நாள் அணிவகுப்பு நடைபெறுவதால் சென்னையில் நாளை(அக். 21) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவாகிறது புயல்!

வங்கக் கடலில் அக். 23 ஆம் தேதி புதிய புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க