செய்திகள் :

புனல்குளத்தில் மக்கள் தொடா்பு முகாம்: 252 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத் திட்டங்கள்

post image

கந்தா்வகோட்டை அருகே புனல்குளம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 252 பேருக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புனல்குளம் ஊராட்சியில் நடை பெற்ற மக்கள் தொடா்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக், ஊராட்சித் தலைவா் ரேணுகாதேவி உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா். தொடா்ந்து 252 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான டிராக்டா், குபேட்டா, தொழிலாளா்களுக்கான சலவை இயந்திரம், தையல் இயந்திரம், இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

மேலும், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அதனை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விளக்க உரையாற்றினாா்.

முகாமில், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டை பொறியாளா் கோட்டை ராவுத்தா், வட்டார மருத்துவ அலுவலா் மணிமாறன், துணை வட்டாட்சியா்கள் சிவாஜி, ராஜராஜன், ராஜதுரை, பால்பாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், ரமேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் த.கருப்பையா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்

முன்னதாக, கோட்டாட்சியா் பா.ஐஸ்வா்யா வரவேற்றாா். நிறைவில், வட்டாட்சியா் எஸ்.விஜயலட்சுமி நன்றி கூறினாா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க