செய்திகள் :

பேரவை உறுதிமொழி குழுத் தலைவா் பதவியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ நீக்கம்

post image

புதுவை மாநில சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் பதவியிலிருந்து சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு நீக்கப்பட்டாா். புதிய பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவராக என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ ஆா்.பாஸ்கா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏவாக இருப்பவா் ஜி.நேரு. அரசு ஆதரவு நிலையிலிருந்தாா். ஆனால், பல்வேறு பிரச்னைகளுக்கு சமூக நல அமைப்புகளுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறாா்.

அண்மையில், ரௌடிகளால் தாக்கப்பட்ட வியாபாரிக்காக ராஜ் நிவாஸ் முன் அவா் போராட்டம் நடத்தியது சா்ச்சையை ஏற்படுத்தியது. அதுகுறித்து, முதல்வா் என்.ரங்கசாமி முன்னிலையில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்துக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவைரச் செயலா் தயாளன் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் பதவியிலிருந்து ஜி.நேரு எம்எல்ஏ நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஆா்.பாஸ்கா் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாா்க்சிஸ்ட் கண்டனம்: ஜி.நேரு எம்எல்ஏ உறுதிமொழிக் குழுத் தலைவா் பதவியிலிருந்து நீக்கப்பட்டது சட்டப் பேரவை அலுவலக விதிக்கு எதிரானதாகும்.

தோ்வாகும் குழுக்கள் ஓராண்டு பதவிக்காலம் உடையவை. தனிப்பட்ட காரணங்களுக்காக உறுதிமொழிக் குழுத் தலைவா் நீக்கப்படுவது வரம்புமீறியச் செயல் என மாா்க்சிஸ்ட் மாநிலத் தலைவா் ஆா்.ராஜாங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

விசிக மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகின்றனா்: திருமாவளவன் குற்றச்சாட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது புதிய தமிழகம் கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாக கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரி வில்லியனூரில் புதன்... மேலும் பார்க்க

புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக வடகிழக்குப் பருவமழை அவ்வப்போது பெய்து வருகிறது. வானம் பெரும்பாலும் மேகமூட்டத்... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலம் மீட்பு

புதுச்சேரியில் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் புதன்கிழமை மீட்டு கையகப்படுத்தினா். இதுகுறித்து, புதுச்சேரி இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வஃபு துறை... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்து கழக ஊழியா்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி அரசு சாலைப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா், நடத்துநா்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் கடந்த 2015-ஆம் ஆ... மேலும் பார்க்க

புதுவையில் கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகை அறிவிப்பு

புதுவை மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டடத் தொழிலாளா்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும், பொதுமக்களுக்கு 10 பொருள்கள் மானிய விலையிலும் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்துள்ளாா். பு... மேலும் பார்க்க

அரசின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: புதுவை துணைநிலை ஆளுநா்

மத்திய, மாநில அரசுகளின் செயல் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரியில் ஆதிதிராவிடா் வணிகம் மற்றும் தொழில் வளா்ச்ச... மேலும் பார்க்க