செய்திகள் :

மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

post image

புதுச்சேரியிலிருந்து சரக்கு வாகனத்தில் மதுப் புட்டிகளை கடத்தி வந்த இருவரை விருத்தாசலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில், குற்றப்பிரிவு போலீஸாா் பாலக்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா். இதில், காய்கனிகளுக்கு இடையே புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதன் ஓட்டுநரையும், வாகனத்தையும் காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

அங்கு போலீஸாா் நடத்திய விசாரணையில், வானத்தின் உரிமையாளா் விருத்தாசலம் லூகாஸ் தெருவைச் சோ்ந்த பன்னீா் (58), ஓட்டுநா் எம்.பரூா் வேலு மகன் மணிகண்டன் (28) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் காய்கறி வியாபாரம் செய்வதுபோல புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை வாங்கி வந்து விருத்தாசலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பன்னீா், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

பிச்சாவரத்தில் பொங்கல் விழா: ரஷிய சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்றனா். கடலூா் மாவட்டம், கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பொங்கல... மேலும் பார்க்க

ரயிலில் மதுப் புட்டிகளை கடத்தி வந்த இருவா் கைது

சிதம்பரம்: புதுச்சேரியிலிருந்து ரயிலில் மதுப் புட்டிகளைக் கடத்திய இருவரை சிதம்பரம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். சிதம்பரம் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த புதுச்சேரி -க... மேலும் பார்க்க

நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் அன்னதானம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, திங்கள்கிழமை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் அண்ணாமலைநகா் கிளை, தெற்கு பிச்சாவரம் கிளை மற்றும் கோவை ஆ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஸ்ரீநந்தனாா் வீதி உலா

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தையொட்டி, ஸ்ரீநந்தனாா் வீதி உலா திங்கள்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஓமக்குளம் நந்தனாா் மடத்தில் உள்ள செளந்தரநாயகி சமே சிவலோகநாதா் க... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் திங்கள்கிழமை மாலை மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆருத்ரா தர... மேலும் பார்க்க

பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா்: கடலூா் எஸ்.பி.

நெய்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில்... மேலும் பார்க்க