செய்திகள் :

மன அழுத்தத்தை போக்க காவலர்களுக்கு உடற்பயிற்சி, விளையாட்டுப் போட்டிகள்!

post image

கோவை: காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க பல்வேறு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை கோவை மாநகர காவல்துறை சனிக்கிழமை நடத்தியது.

காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனைப் போக்கும் வகையில் கோவை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்த காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிக்க |ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா யானை!

கோவை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற மன அழுத்தம் குறைப்பதற்கான போட்டிகளில் பங்கேற்ற பெண் காவலர்கள்.

அதன்படி, கோவை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் துணை ஆணையாளர் சரவணன் மேற்பார்வையில் சனிக்கிழமை மன அழுத்தம் குறைப்பதற்கான பலூன் உடைத்தல், நடனமாடுதல் மற்றும் யோகா, பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண், பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற மன அழுத்தம் குறைப்பதற்கான போட்டிகளில் பங்கேற்ற காவலர்கள்.

இதற்கான ஏற்பாடுகளை கோவை மாநகர ஆயுதப்படை உதவி ஆணையாளர் நாகராஜ் செய்திருந்தார்.

ஒரே கவிதை, ஏழாண்டுகள் சிறை! - கவிதைதான் குற்றம் - 3

உலக வல்லரசு நாடுகள் ஒன்றின் தலைநகர் அது. பன்னிரண்டு மில்லியனுக்கு மேல் (1.2 கோடி) மக்கள் வாழும், அப்பெருநகரில் அண்மைக்காலங்களில் ஆண்களின் நடமாட்டம் - ‘அறம் கைக்கொண்ட’ அரசியல்வாதியைக் காண்பதுபோல - அரித... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதால் உளறுகிறார்: அமைச்சர் ராஜேந்திரன்

சேலம்: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் காய்ச்சல் வந்து விட்டதால் ஏதேதோ உளறுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே நடைபெற்ற அதி... மேலும் பார்க்க

வேலை ஏதும் இல்லாதவர் எடப்பாடி: முதல்வர் விமர்சனம்

பத்திரிகை மற்றும் தொலைகாட்சிகளில் நாள்தோறும் தனது முகம் வரவேண்டும் என்பதற்காக, அரசை குறை சொல்லி எதையாவது உளறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவறுக்கு வேலை இல்லாததால் இதை தொடர்ந்து செய்கிறார் போலும்... மேலும் பார்க்க

கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சியில் தொடங்கிய மெட்ரோ திட்டத்தால் சென்னை மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார். சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்... மேலும் பார்க்க

மதுரையில் மழைநீரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது: முதல்வர் ஸ்டாலின்

மதுரையில் 8 பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. மழைநீரை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ததையொட்டி ம... மேலும் பார்க்க

ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா யானை!

கோவை: கோவை செம்மேடு, ஆலங்குட்டை பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றைக் காட்டுயானை சிறுவாணி காட்டு ராஜா சனிக்கிழமை நடைப் பயிற்சிக்கு செல்வது போன்று ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜாவை வனப்பகுதி... மேலும் பார்க்க