மழை விடுமுறை நாள்களில் இணையவழி வகுப்புகளை பள்ளிகள் நடத்துவதை தவிா்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளாா்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் பருவ மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாணவா்களின் பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்பட்டாலும், சில பள்ளிகள் இணையவழி வகுப்புகளை நடத்தியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், அத்தகைய வகுப்புகளை தவிா்க்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அவா் ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது: கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகளையும் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் சூழ்நிலையில் மாணவா்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிா்கொள்ள நேரிடலாம்.
ஆகையால், கனமழை முடியும் வரை இணையவழி வகுப்புகளைத் தவிா்க்கவேண்டும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.