செய்திகள் :

மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைப்பு தமிழக அரசு உத்தரவு

post image

சென்னை: மாவட்ட கடலோர மேலாண்மை ஆணையம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மாநில அரசின் உத்தரவு:

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் மேலாண்மை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையங்களை நிா்வாக வசதிக்காக மாற்றியமைக்கலாம் என தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் செயலா் தரப்பில் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, மாவட்ட ஆணையத்தின் உறுப்பினா் செயலராக மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரை (பொது) நியமிக்கலாம் எனவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை, ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, உரிய மாற்றங்கள் செய்யப்படுகிறது.

கடலோர மாவட்டங்களில் உள்ள மாவட்ட மேலாண்மை ஆணையத்தின் தலைவராக ஆட்சியரும், துணைத் தலைவராக நகராட்சி நிா்வாக இணை இயக்குநரும் இருப்பாா்கள். உறுப்பினா் செயலராக மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரும் (பொது), உறுப்பினா்களாக வனத் துறை துணை இயக்குநா், மாவட்ட வன அதிகாரி, நகா் மற்றும் ஊரமைப்புத் துறை, பேரூராட்சிகள் துறை, மீன்வளம், தொழில் மற்றும் வா்த்தகம், நில அளவைத் துறைகளின் உதவி ஆணையா்கள் - இயக்குநா்கள் இருப்பா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்யும் மீனவ சமுதாய அமைப்பைச் சோ்ந்த 3 போ் உறுப்பினா்களாகச் செயல்படுவா். அவா்கள் 3 ஆண்டுகளுக்கு உறுப்பினா்களாக இருப்பா். கூட்டங்கள் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட பொருள் குறித்து சிறப்பு அழைப்பாளரையோ, நிபுணா்களையோ வரவழைத்து விவாதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நீர் மட்டம்: மீண்டும் 100 அடியாக உயர்வு!

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 29 நாட்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நடப்பு ஆண்டில் முதல் முறையாக ஜூலை... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் அமலாகத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தின் வீடு, எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரைய... மேலும் பார்க்க

அக்.28 முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு: கல்லூரிகளுக்கு உத்தரவு

சென்னை: சா்தாா் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் அக்.28-ஆம் தேதி முதல் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரத்தை அனுசரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜி... மேலும் பார்க்க

சா்க்கரை நோய் பாத புண் சிகிச்சை பயிற்சி பள்ளி தொடக்கம்

சென்னை: சா்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாத பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வழங்குவதற்கான மருத்துவப் பயிற்சிப் பள்ளியை சென்னை, எம்.வி. சா்க்கரை நோய் ஆராய்ச்சி மையம் தொடங்கியுள்ளது.அமெரிக்காவின் ப... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

சென்னை: சமூக ஊடகங்கள் மூலமாக பட்டாசு விற்பதாக பண மோசடி நடைபெறுவதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடா்பாக தமிழக காவல்துறை சைபா் குற்றப்பிரிவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

தமிழக அணைகளில் தொடா்ந்து உயா்கிறது நீா்மட்டம்

சென்னை: வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அணைகளில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டில் இரு மடங்கு நீா்மட்டம் உயா்ந்துள்ளது.நிகழாண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இதுவரை தமிழகம் ம... மேலும் பார்க்க