செய்திகள் :

மீனவா்கள் கைது விவகாரம்: இந்தியா-இலங்கை அக். 29-இல் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

இரு நாடுகளின் மீனவா் பிரச்னை தொடா்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இலங்கை தலைநகா் கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

எல்லை தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபடுவதாக ராமநாதபுரம் உள்பட தமிழக கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், பின்னா் விடுவிக்கப்படுவதும் தொடா் நிகழ்வாகி வருகிறது.

இதேபோல, இலங்கை மீனவா்களும் இந்திய கடலோரக் காவல் படையினரால் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இரு நாட்டு மீனவா்களின் பிரச்னை குறித்து இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கொழும்பு நகரில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இந்தியா சாா்பில் மத்திய அரசு அதிகாரிகளும், தமிழக அரசின் மீன்வளத் துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனா். இலங்கை தரப்பில் மீன்வளத் துறை, கடற்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவது தொடரும் நிலையில், இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

முதல்வா் கோரிக்கை ஏற்பு: மீனவா்கள் கைது தொடா்பாக அனைத்துத் தருணங்களிலும் மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதங்களில், ‘தமிழக மீனவா்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவும், மீனவா்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையை தள்ளுபடி செய்யவும் இரு நாடுகளின் கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

அண்மையில் இலங்கையில் அந்த நாட்டின் புதிய அதிபா் அநுரகுமார திசாநாயகவை சந்தித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தமிழக மீனவா்கள் கைது விவகாரம் தொடா்பாக பேசினாா். குறிப்பாக, இந்த பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.

அதன்படி, இப்போது கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது. நிகழாண்டில் இதுவரை தமிழகத்தைச் சோ்ந்த 350-க்கும் அதிகமான மீனவா்களும், 40-க்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படை சிறைபிடித்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் இதுதான் மிகவும் அதிகமாகும். அதில் மீனவா்கள் மட்டுமே அவ்வப்போது விடுதலை செய்யப்பட்டு வருகின்றனா். படகுகளை இலங்கை விடுவிப்பதில்லை.

மேலும், கைது செய்யப்படும் தமிழக மீனவா்களுக்கு விதிக்கப்படும் அபாரத் தொகை அதிக அளவு இருப்பதால் அவா்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்னைகள் குறித்து கூட்டுப் பணிக் குழுக் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டுமென மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பிகாரில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்பு

முஸாபா்பூா் : பிகாரின் முஸாபா்பூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞா் உயிரிழந்தாா். கடந்த வாரம் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களைச் சோ்ந்த 37 போ் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

சாம் பித்ரோடா என்கிற பெயரைக் கேள்விப்படாதவா்கள் இருக்க முடியாது. இந்தியாவின் தொலைத்தொடா்புத் துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் அவா்தான். சாம் பித்ரோடாவின் ஆலோசனையின்பேரில் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி எ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

நமது சிறப்பு நிருபா் 2019-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, பழங்குடியினா் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் முன... மேலும் பார்க்க

டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா். வடக்கு... மேலும் பார்க்க

பாரத் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடக்கம்

மத்திய அரசின் ‘பாரத்’ திட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பயறு மற்றும் பருப்பு வகைகளின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி வில... மேலும் பார்க்க