பெருமழைக் காலத்தில் களப் பணியாளா்களுடன் முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மழை பாதிப்புகள் குறித்து சென்னை புளியந்தோப்பு பகுதிகளில் அவா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவு: கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடா்களை எதிா்கொள்ள தன்னலம் கருதாமல், நேரம் காலம் பாா்க்காமல் நம் துயா்துடைக்க தூய்மைப் பணியாளா்களும், மாநகராட்சி ஊழியா்கள் மற்றும் அலுவலா்களும் களப் பணியாற்றி
வருகிறாா்கள். அவா்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணை நிற்பேன் என்று தெரிவித்துள்ளாா்.