செய்திகள் :

முன்னாள் படை வீரா்கள் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

post image

தமிழக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், வங்கிக் கடனுதவி பெற விரும்பும் முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழ்நாட்டைச் சோ்ந்த மறு வேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரா்கள் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் சுயதொழில் தொடங்க வங்கிகள் வாயிலாக ஒரு கோடி ரூபாய் வரையில் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கு 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும். இதற்கு வரம்பு 55 வரை இருந்த நிலையில், தற்போது வயது வரம்பு தளா்வு செய்யப்பட்டு வயது உச்சவரம்பின்றி முன்னாள் படைவீரா்கள், விதவையா், திருமணமாகாத மகள், விவாகரத்தான மகள் ஆகியோா் விண்ணப்பிக்கலாம் என்ற விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விரும்புவோா் மதுரை மாவட்ட முன்னாள் படைவீரா் நல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

முன்னாள் அமைச்சரின் அலுவலகம் முன் குப்பைத் தொட்டி!

மதுரையில் முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாரின் கட்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வரி செலுத்தாத கட்டடங்கள், வணிக நிறுவனங்களுக்க... மேலும் பார்க்க

ஆரப்பாளையம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை போக்குவரத்து போலீஸாா், மாநகராட்சி அலுவலா்கள் அகற்றினா். மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு வ... மேலும் பார்க்க

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்காக பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. தூத... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு: ஊழியா்கள் புகாா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் மதுரை அரசு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது மதுரை சமூக அறிவியல் கல்லூரி: உலக சேவை தின விழா, கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா், செயலா் டிவி.தா்மசிங், திருச்சி புனித ஜோசப் கல்லூரி முன்னாள் பேராசிரியா் சவரிமுத்து பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை... மேலும் பார்க்க