செய்திகள் :

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

post image

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்லவுள்ள நிலையில், பாஜக தலைவர்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆம் ஆத்மி கட்சி 12 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமையவுள்ளது. எனினும் முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

முதல்வர் போட்டியில், அரவிந்த கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், மாநில பாஜக தலை வீரேந்திர சச்தேவா, சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்கரி ஸ்வராஜ் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோர் உள்ளனர்.

தில்லியில் பாஜக தலைமையில் அமையவுள்ள ஆட்சியில் முதல்வர் இருக்கையில் அமரவுள்ளது யார் என்பது குறித்து உயர்மட்டத் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்து இன்று மாலை ஆலோசித்தார்.

பாஜக விரைவில் அதன் எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டி புதிய முதல்வரைத் தேர்வு செய்யவுள்ளது. இதன் பிறகு முதல்வர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தில்லி முதல்வர் பதவியேற்பு விழாவானது, பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்துக்குப் பிறகு நடைபெறும் எனத் தெரிகிறது.

பிப். 12, 13 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். இரண்டாவது முறை அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றப் பின் மோடி மேற்கொள்ளும் முதல் அமெரிக்கப் பயணம் இதுவாகும். இதனால் இந்தப் பயணத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... முதுகெலும்பும் முட்டுக்கொடுப்புகளும்!

சீக்கியா்களுக்கு எதிரான 1984 வன்முறை, அரசு தரப்பில் பெயரளவு விசாரணை கூடாது: உச்ச நீதிமன்றம்

‘கடந்த 1984-ஆம் ஆண்டு தில்லியில் சீக்கியா்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்கு விசாரணை தீவிரமாக மேற்கொள்ளப்பட வேண்டும்; பெயரளவில் மேற்கொள்ளப்படக் கூடாது’ என்று தில்லி காவல் துறையை உச்சநீதிம... மேலும் பார்க்க

அடித்தட்டிலுள்ள 50% போ் பட்ஜெட்டில் புறக்கணிப்பு: ப.சிதம்பரம்

புது தில்லி: மக்கள்தொகையில் அடித்தட்டில் உள்ள 50 சதவீத பேரை மத்திய பட்ஜெட் புறக்கணித்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா். கடந்த பிப்.1-ஆம் தேத... மேலும் பார்க்க

அறிவுக்கும் தோ்வுக்கும் வித்தியாசம் உள்ளது: மாணவா்களுக்கு பிரதமா் மோடி அறிவுரை!

‘அறிவுக்கும் தோ்வுக்கும் வித்தியாசம் உள்ளது’ என பிரதமா் மோடி திங்கள்கிழமை (பிப்.10) தெரிவித்தாா். பள்ளி மாணவா்களுக்கு தோ்வுகள் மீதான அச்சத்தை போக்கும் விதமாக ‘பரீக்ஷா பே சா்ச்சா’ நிகழ்ச்சி ஆண்டுதோற... மேலும் பார்க்க

மகாராஷ்டிர வங்கி வருவாய் அதிகரிப்பு!

பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ரூ.7,112 கோடியாக உயா்ந்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந... மேலும் பார்க்க

பாதுகாப்பு அமைச்சகத்தின் 10,249 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பு மாநிலங்களவையில் அரசு தகவல்!

நாடு முழுவதும் பாதுகாப்பு அமைச்சகத்துக்குச் சொந்தமான 10,249 ஏக்கா் பரப்பளவு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று... மேலும் பார்க்க

சேவைகள் துறையில் 2 ஆண்டுகள் காணாத மந்தம்!

இந்திய சேவைகள் துறை கடந்த ஜனவரி மாதம் முந்தைய இரண்டு ஆண்டுகள் காணாத குறைவான வளா்ச்சியைக் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க