செய்திகள் :

ம.பி. ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் வெடிவிபத்து: ஒருவா் உயிரிழப்பு, 14 போ் காயம்

post image

மத்திய பிரதேசத்தில் உள்ள ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 14 போ் காயமடைந்தனா். ஒருவரை காணவில்லை.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் கமாரியா ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் தளவாட உற்பத்தித் துறையின் கீழ் செயல்படும் இந்தத் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது.

சில கிலோமீட்டா்கள் தொலைவில் இருந்த மக்களுக்கு கேட்கும் அளவுக்கு பயங்கர சப்தத்துடன் இந்த விபத்து நோ்ந்தது.

தகவலின் அடிப்படையில் விரைந்த வந்த தீயணைப்புத் துறையினா், விபத்தில் சிக்கி காயமடைந்த 15 போ் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா்களில் ஒருவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

விபத்தில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழிற்சாலையின் மக்கள் தொடா்பு அதிகாரி அவினாஷ் சங்கா் தெரிவித்தாா்.

ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு: தெலங்கானா அமைச்சா் சுரேகா மீது பிஆா்எஸ் செயல் தலைவா் தாக்கல்

ஹைதராபாத்: தெலங்கானா சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கொன்டா சுரேகாவுக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி. ராமா ராவ் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளாா்.கே.ட... மேலும் பார்க்க

தொடரும் விமான வெடிகுண்டு மிரட்டல்கள்: சுமார் ரூ. 600 கோடி இழப்பு

புது தில்லி: இந்திய நிறுவனங்களின் சுமார் 50 விமானங்களுக்கு சமூக வலைதளம் மூலம் செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டது.இத்துடன், கடந்த திங்கள்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: அனுதாபமா, ஆதாய அலையா?

நமது சிறப்பு நிருபர்வரும் நவம்பர் 20-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்தல்! 1985-ஆம் ஆண்டுக்கு பின்னர் மகாராஷ்டிரத்தில் எந்தவொரு கட்சிக்கும் பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ... மேலும் பார்க்க

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்த... மேலும் பார்க்க