செய்திகள் :

"ரிஷப் ஷெட்டி தேசிய விருது வாங்க வேண்டும்" - `காந்தாரா சாப்டர் 1' பார்த்துவிட்டு போன் செய்த அட்லி

post image

ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2022-ல் வெளியாகி சுமார் ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்த `காந்தாரா' திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் கன்னட சினிமா பக்கம் திருப்பியது.

அதன் அடுத்த பாகமாக, இந்த மாத தொடக்கத்தில் வெளியான `காந்தார சாப்டர் 1' திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனில் முதல் பாகத்தை ஓவர்டேக் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

காந்தாரா சாப்டர் 1 - Kantara Chapter 1
காந்தாரா சாப்டர் 1 - Kantara Chapter 1

விமர்சன ரீதியாகவும் தென்னிந்தியா முதல் பாலிவுட் வரை பல்வேறு இயக்குநர்கள், நடிகர்கள் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

படத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கும் விதம் பற்றி பலரும் வியந்து பாராட்டுகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் இயக்குநர் அட்லி இப்படத்தைப் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டியைப் பாராட்டியிருக்கிறார்.

பெங்களூருவில் இந்தியா டுடே ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "இந்தப் படம் வெளியானபோது நான் ஆம்ஸ்டர்டாமில் (நெதர்லாந்து தலைநகர்) இருந்தேன்.

அங்கு இரண்டரை மணிநேரம் பயணம் செய்து தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தேன்.

அட்லி
அட்லி

பார்த்துவிட்டு உடனடியாக போன் செய்தேன். அவர் எனக்கு நல்ல நண்பர். அவர்மீது ரொம்ப மரியாதை இருக்கிறது.

எல்லா இயக்குநர்களுக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் அவர். கிட்டத்தட்ட சாத்தியமில்லாததை அவர் செய்திருக்கிறார்.

இது கடினம் என்று ஒரு இயக்குநராக என்னால் கூற முடியும். ஆனால், இதில் அவர் ஹீரோவும் கூட.

உண்மையில் அவர் தேசிய விருது வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன். படத்தில் அவர் கொண்டுவந்திருப்பது நினைத்துக்கூட பார்க்க முடியாதது" என்று அட்லி கூறினார்.

"பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் அடுத்த படம்" - கலைமாமணி விருது பெற்ற நடிகர் மணிகண்டன் கொடுத்த அப்டேட்

நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக அரசின் 'கலைமாமணி' விருது விழா நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுக... மேலும் பார்க்க

``இளையராஜாவுக்கு ஏன் பாராட்டு விழா நடத்தினோம்'' - முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்

தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டின் கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கலைமாமணி விருது.இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

கலைமாமணி விருது: 'SJ சூர்யா, அனிருத், சாய் பல்லவி, மணிகண்டன்' - விருதாளர்கள் க்ளிக்ஸ் | Photo Album

இசையமைப்பாளர் அனிருத்நடிகர் SJ சூர்யாநடிகையார் சாய் பல்லவியேசுதாஸுக்கு பதிலாக விஜய் யேசுதாஸ் விருது பெற்றார்நடிகர் விக்ரம் பிரபுஇயக்குநர் லிங்குசாமிபாடலாசிரியர் விவேகாகலைமாமணி விருது: "இந்த விருது என்... மேலும் பார்க்க

இட்லி கடை: "கருப்பு சாமியும் கன்றுக் குட்டியும் கண்களைக் கலங்க வைக்கின்றன" - செல்வராகவன் பாராட்டு

கடந்த வாரம், தனுஷ் எழுதி இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தைப் பாராட்டி இயக்குநர் செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செல்வராகவன் பதிவுஅந்தப் பதிவில் "இட்லி கடை!... மேலும் பார்க்க

Kajal Aggarwal: `நல்லதொரு குடும்பம்' - நடிகை காஜல் அகர்வால் பகிர்ந்த ஃபேமிலி கிளிக்ஸ்! |Photo Album

kalyani priyadarshan: `அப்தி அப்தி...' - நடிகை கல்யாணி பிரியதர்ஷன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! | Photo Album மேலும் பார்க்க

தேசிய தலைவர்: ``இந்தப் படம் வரலாறா? கற்பனையா?" - மேடையில் முற்றிய வாக்குவாதம்! - என்ன நடந்தது?

ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில், எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் தயாரிப்பில் 'தேசியத் தலைவர்' திரைப்படம் உருவாகியிருக்கிறது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கையை... மேலும் பார்க்க