செய்திகள் :

Uttar Pradesh: சிறையில் காசோலை திருட்டு; விசாரணையில் பகீர் தகவல்; அதிகாரி, கைதிகள் சிக்கியது எப்படி?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்ட சிறைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கில் இருந்து சமீபத்தில் ரூ.2.6 லட்சம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதை சிறை அதிகாரி ஆதித்ய குமார் கண்டுபிடித்தார்.

இது குறித்து சிறை கணக்காளர் முஷார் அகமத்திடம் விசாரித்தபோது தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துவிட்டார்.

இதையடுத்து வங்கிக்கணக்கை முழுமையாக ஆய்வு செய்யும்படி ஆதித்ய குமார் கேட்டுக்கொண்டார். இதில் ரூ.30 லட்சம் அளவுக்கு சிறை நிர்வாகத்திற்குத் தெரியாமல் எடுக்கப்பட்டு இருந்தது.

அப்பணம் யாருக்குச் சென்று இருக்கிறது என்பது குறித்து விசாரித்தபோது ராம்ஜித் யாதவ் என்பவரது வங்கிக்கணக்கிற்குச் சென்று இருந்தது.

ராம்ஜித் யாதவ் கடந்த 2023ம் ஆண்டில் இருந்து மனைவியைக் கொலை செய்த வழக்கில் அசாம்கர் மாவட்ட சிறையில் இருந்து வந்தார்.

சிறை
சிறை

அவர்தான் சிறையில் இருந்தபோது காசோலையைத் திருடி பணத்தை எடுத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ராம்ஜித் யாதவை போலீஸார் பிடித்துச்சென்று விசாரித்தபோது, சிறையில் இருந்த மற்றொரு கைதி சிவ்சங்கர், சிறை கணக்காளர் முஷார் அகமத் மற்றும் சிறை வாட்ச்மென் குமார் பாண்டே ஆகியோர் இணைந்து இந்த மோசடியைச் செய்திருப்பது தெரிய வந்தது.

ராம்ஜித் யாதவ் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்தபோது சிறையில் திருடிய காசோலையைப் பயன்படுத்தி சிறைக்குச் சொந்தமான பணத்தைத் தனது வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார்.

ராம்ஜித் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகும் நாளில் காசோலையைத் திருடியதாக போலீஸ் விசாரணையில் ராம்ஜித் தெரிவித்துள்ளார். ராம்ஜித் மற்ற மூவருடன் சேர்ந்து சிறை அதிகாரி போன்று கையெழுத்து போட்டு பல்வேறு சந்தர்ப்பங்களில் பணத்தை எடுத்துள்ளனர்.

இம்மோசடிக்கு சிறை கணக்காளர் முஷார் அகமத் கூட்டு என்பதால் சிறை வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து வெளியில் தெரியாமல் இருந்து வந்தது. மோசடிக்குக் காரணமான நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சாவூர்: அரசுப் பேருந்தில் சென்ற பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; நடத்துநர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி ஒரத்தநாட்டில் உள்ள தனியார... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது; காவல்துறை விசாரணை

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைமேற்கு வங்கத்தில் அடிக்கடி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர் பால... மேலும் பார்க்க

குஜராத்: போலி சம்மன், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.100 கோடி கொள்ளை; தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது

நாடு முழுவதும் அடிக்கடி `டிஜிட்டல் கைது' மூலம் சைபர் கிரிமினல் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழு... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: முட்டி போட மறுத்த பட்டியலின இளைஞர்; சாவியால் முதுகைக் கிழித்த மாற்றுச் சமூக இளைஞர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது நண்பர்கள் சரஸ்வதிவிளாகம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் அஜய். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த 06.11.2... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: `திருமணம் மீறிய உறவில் மனைவி' - 3 குழந்தைகளை தந்தையே கொன்ற சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (38). ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா (35). (பெயர் மாற்றம் செய்யப்... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மரணம்; இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

விசாரணைக்கு அழைத்துச் சென்ற தினேஷ்குமார் என்ற இளைஞர் சந்தேகமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா ஆ... மேலும் பார்க்க