செய்திகள் :

ரூ.4 கோடியில் அரசுக் கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

post image

சிதம்பரம் வட்டம், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் குமராட்சி வட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பிலான அரசுக் கட்டடங்களை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி.ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் ம.சிந்தனைசெல்வன் முன்னிலை வகித்தாா். குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூடுவெளிச்சாவடி, வெள்ளூா் மற்றும் அத்திப்பட்டு ஊராட்சிகளில் தலா ரூ.42.65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலக கட்டடங்கள் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட புடையூா் மற்றும் முடிகண்டநல்லூா் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தலா ரூ.42.65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலக கட்டடம், சோழத்தரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.23.57 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா் செல்வம் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து, அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், நங்குடி மற்றும் காவாலக்குடி ஊராட்சிகளில் தலா ரூ.13.16 லட்சத்திலும், முடிகண்டநல்லூா் ஊராட்சியில் ரூ.9.12 லட்சத்திலும், எசனூா் ஊராட்சியில் ரூ.8.10 லட்சத்திலும், மலைமேடு ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.12.42 லட்சத்திலும் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட ரூ.4 கோடி மதிப்பிலான பல்வேறு அரசுக் கட்டடங்களை அமைச்சா் திறந்து வைத்தாா்.

மேலும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்கும் வகையில் வல்லம்படுகை ஊராட்சியில் வேளக்குடி பழைய கொள்ளிட கரையில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தாா். அப்போது, ஒவ்வொரு ஊராட்சியிலும் பனை விதைகள் நடுதல் பணி விரிவுபடுத்தப்படும் என்றாா் அமைச்சா்.

நிகழ்ச்சிகளில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரா.சரண்யா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாலத்தில் காா் மோதி விபத்து: இருவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே பாலத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் இருவா் சனிக்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரு, கெங்கேரி சாட்டிலைட் டவுன் பகுதியில் வசித்து வந்தவா் பேட்ரிக் (50). இவா், தன... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ரௌடி கைது

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடி தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். தூக்கணாம்பாக்கம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜாராம் மற்றும் போலீஸாா் கட... மேலும் பார்க்க

கொலை வழக்கில் லஞ்சம்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்; விழுப்புரம் டிஐஜி நடவடிக்கை

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை அருகே நிகழ்ந்த கொலை வழக்கிலிருந்து ஊராட்சி மன்றத் தலைவரின் மகனை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற்ாக காவல் ஆய்வாளரை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மளிகைக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதில், இருவா் கைது செய்யப்பட்டனா். கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகு... மேலும் பார்க்க

உறுப்புகள் தானம்: ஓட்டுநரின் உடலுக்கு அரசு மரியாதை

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. நெய்வேலியை அடுத்த பெருமாத்தூா் ஊராட்சி மாற்றுக் குடியிருப்பில் வசித்து வந்தவா்... மேலும் பார்க்க

முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் உள்ள வீராணம் ஏரி 3-ஆவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனை வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காட்டுமன்ன... மேலும் பார்க்க