செய்திகள் :

ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.58,000-ஐ கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கு விற்பனையான நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக மீண்டும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் அக்.16-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், அக்.17-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.57,280-க்கும், அக்.18-இல் பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை(அக்.19) தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240-க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த நான்கு நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,480 உயா்ந்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலை தொடா்ந்து 5-ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.105-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,000 உயா்ந்து ரூ.1,05,000-க்கும் விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.105.10-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 உயர்ந்து ரூ.1,05,100-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிக்க |கொள்ளை போன ரூ.1 கோடி: மீட்க உதவிய மோப்ப நாய்

ரூ.60,000-ஐ தொடும்

அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில், அது வரும் நவம்பா் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. அதேபோல், ஐரோப்பிய மத்திய வங்கியும் அதன் வட்டியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் விலை பவுன் ரூ.60,000-ஐ தொடக்கூடும் என்று கூறுகின்றனர்.

கடந்த 4 நாள்களில் தங்கம் விலை நிலவரம்

கிராம் பவுன்

அக். 16: ரூ.7,140 (+45) ரூ.57,120 (+360)

அக். 17: ரூ.7,160 (+20) ரூ.57,280 (+160)

அக். 18: ரூ.7,240 (+80) ரூ.57,920 (+640)

அக். 19: ரூ.7,280 (+40) ரூ.58,240 (+320)

சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வதந்திகள் பெரும் சவால்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் சமூகவலைதளத்தில் பரவும் வதந்திகள் பெரும் சவாலாக உள்ளன. சமூகவலைதள வதந்திகளை கண்காணித்து மாநில மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி... மேலும் பார்க்க

ஆளுநர் விழாவில் சரியாகப் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று(சனிக்கிழமை) கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப்பட்டது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொ... மேலும் பார்க்க

தமிழ் பேசத் தெரிந்தவர்தான் அடுத்த பிரதமர்! பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் கணிப்பு

அடுத்த பிரதமர் தமிழ் மொழி பேசத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்று தமிழ்நாட்டின் பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப்பான ‘ஒளிமயமான எதிர... மேலும் பார்க்க

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

இரிடியம் தருவதாகக் கூறி கோவையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டது தொடா்பாக 4 பேரை கைது செய்து, 7 பேர் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.கேரள மாநிலம், பாலக்காடு, காரக்குறிச... மேலும் பார்க்க

பெண்களை தவறாக விடியோ எடுத்த போக்குவரத்து காவலர்: பிடித்து கொடுத்த பொதுமக்கள்!

கோவை சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே பெண்களை தவறாக விடியோ போக்குவரத்து காவலரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.கோவை சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை இர... மேலும் பார்க்க

மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது ... மேலும் பார்க்க