செய்திகள் :

வயநாடு மக்களுக்குப் பிரியங்கா எழுதிய கடிதம்..!

post image

வயநாட்டின் பொதுப் பிரதிநிதியாகத் தனது முதல் பயணம் இருக்குமே தவிரப் போராளிக்கான பயணமாக இருக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

கேரளத்தின் வயநாடு எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

தனது கணவர் ராபர்ட், தாய் சோனியா, சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் சேர்ந்து வயநாடு தொகுதியில் பேரணியாகச் சென்று அக்.23ல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் சத்யன் மோகெரியும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் வயநாடு மக்களுக்கு பிரியங்கா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பது..

மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள். மக்கள் பிரதிநிதியாக எனது முதல் பயணமாக இருக்கும். ஆனால் போராளிக்கான பயணமாக இருக்காது.

ஜனநாயகம், நீதி, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்காக போராடுவது தான் எனது வாழ்வின் மையமாக இருக்கும்

உங்கள் ஆதரவுடன் எதிர்காலத்திற்காக இந்தப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் எதிர்நோக்குகிறேன், நீங்கள் என்னை எம்.பி.யாக்க முடிவு செய்தால் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன் என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பு... குஜராத்தில் ஒருவர் கைது!

இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் குறித்து முக்கியத் தகவல்களை பாகிஸ்தான் உளவாளிக்குத் தெரிவித்த குஜராத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குஜராத் மாவட்டத்தின் போர்பந்தர் நகரில் வசிப்பவர் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஹரியாணா, மிசோரம் முதல்வர்கள் சந்திப்பு

தலைநகர் தில்லியில் பிரதமர் மோடியை ஹரியாணா, மிசோரம் முதல்வர்கள் இன்று சந்தித்தனர். பிரதமர் அலுவலகத்தின் எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ஹரியாணா முதல்வர் நயப் சிங் சைனி, பிரதமர் மோடியை சந்தித்தார். இத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: காங்கிரஸின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மகாராஷ்டிர மாநில பேரவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி ஆலோசனை மேற்கொண்டதையடுத்து இந்த பட்டியல் வெளியி... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் பருவமழைக்கு 25 பேர் பலி: சித்தராமையா

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழைக்கு 25 பேர் மழை தொடர்பான பல்வேறு காரணங்களால் உயிரிழந்ததாகவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இதுதொடர்பாக முதல... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 30 குரங்கு சடலங்கள் கண்டெடுப்பு

தெலங்கானாவில் கிட்டத்தட்ட 30 குரங்குகள் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், வெமுலவாடா காவல் எல்லைக்குட்பட்ட நம்பள்ளி கிராமத்தின் புறநகர்ப் பகுதியில் வெள்ளி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் தேர்தல்: காங்கிரஸின் 2-ஆம் கட்ட பட்டியல் வெளியீடு!

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிரத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 20-ஆம் தேதி தேர்தல் ந... மேலும் பார்க்க