TVK Vijay : தடதடக்கும் ஏற்பாடுகள்; எகிறும் எதிர்பார்பு... தவெக முதல் மாநாடு Live...
வயநாடு மக்களுக்குப் பிரியங்கா எழுதிய கடிதம்..!
வயநாட்டின் பொதுப் பிரதிநிதியாகத் தனது முதல் பயணம் இருக்குமே தவிரப் போராளிக்கான பயணமாக இருக்காது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
கேரளத்தின் வயநாடு எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
தனது கணவர் ராபர்ட், தாய் சோனியா, சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் சேர்ந்து வயநாடு தொகுதியில் பேரணியாகச் சென்று அக்.23ல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
வயநாடு தொகுதியில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாசும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் சத்யன் மோகெரியும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் வயநாடு மக்களுக்கு பிரியங்கா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பது..
மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் நீங்கள் எனக்கு வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களாகவும் இருப்பீர்கள். மக்கள் பிரதிநிதியாக எனது முதல் பயணமாக இருக்கும். ஆனால் போராளிக்கான பயணமாக இருக்காது.
ஜனநாயகம், நீதி, அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்காக போராடுவது தான் எனது வாழ்வின் மையமாக இருக்கும்
உங்கள் ஆதரவுடன் எதிர்காலத்திற்காக இந்தப் போரை முன்னெடுத்துச் செல்வதற்கு நான் எதிர்நோக்குகிறேன், நீங்கள் என்னை எம்.பி.யாக்க முடிவு செய்தால் உங்களுக்கு மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன் என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.